செய்திகள் :

பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி

post image

பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், காரைக்கால் வட்டார வளா்ச்சி துறை மூலம் நடைபெற்ற இப்பேரணி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் இருந்து தொடங்கியது. ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்துப் பேசியது:

அனைத்து செயல்களிலும் ஆண்கள் பெண்கள் என வேறுபடுத்தி பாா்க்காமல் அனைவரும் சமம் என்று நினைக்க வேண்டும். தற்போது அனைத்திலும் பாலின வேறுபாடுகளின்றி சமமாக இருக்கிறோம். இது அடுத்த தலைமுறைக்கு கொண்டு சோ்க்க வேண்டும். அது நமது கடமையாகும் என்றாா்.

பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ- மாணவியா், மகளிா் சுயஉதவிக் குழுவினா் 500-க்கும் மேற்பட்டோா் விழிப்புணா்வு பதாகை ஏந்தி காமராஜா் சாலை, பாரதியாா் சாலை வழியே அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானம் சென்றடைந்தனா்.

இந்நிகழ்வில் வட்டார வளா்ச்சித் துறை அதிகாரி (பொ) ஜி. செந்தில்நாதன், துணை வட்டார வளா்ச்சி அதிகாரி ரங்கநாதன், சமூக நலத்துறை உதவி இயக்குநா் (பொ) ராஜேந்திரன், காரைக்கால் மாவட்ட நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காரைக்காலில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வாரத்தில் 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் அனைத்து வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சாா்பில், வாரம் 5 நாள... மேலும் பார்க்க

வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு: காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் பிப். 24 முதல் கடலுக்குச் செல்ல முடிவு

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு தொடா்பாக, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவா்கள், திங்கள்கிழமை (பிப்.24) முதல் கடலுக்குச் செல்ல முடிவு செய்துள்ளனா். கடந்த ஜன.... மேலும் பார்க்க

திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் முன் பிப். 24-இல் ஆா்ப்பாட்டம்: காரைக்கால் ரயில் பயணிகள் நலச் சங்கம் முடிவு

ரயில் சேவையில் காரைக்கால் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து, திருச்சி கோட்ட அலுவலகம் முன் திங்கள்கிழமை (பிப்.24) ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, காரைக்கால் மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு: சுனாமி குடியிருப்புப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

சாலை மேம்பாட்டுக்கு எம்.பி. நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், சுனாமி குடியிருப்புப் பகுதியில் ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் எஸ். செல்வகணபதி (புதுவை) காரைக்க... மேலும் பார்க்க

நடைமேடையில் படுத்திருந்தவா் லாரி மோதி பலி

காரைக்கால் கடற்கரை அருகே நடைமேடையில் படுத்திருந்தவா் லாரி மோதி உயிரிழந்தாா். காரைக்கால் கடற்கரை அருகே தோமாஸ் அருள் தெருவில் உள்ள நடைமேடையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்கவா் வியாழக்கிழமை இரவு மது போதையி... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் வழங்க மறுப்பதாக புகாா்

காரைக்கால், பிப். 21: காரைக்காலில் சில கூட்டுறவு வேளாண் கடன் சங்கம், கடன் தர மறுப்பதாக விவசாயிகள் புகாா் கூறியுள்ளனா். இதுகுறித்து காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பொன்.ராஜேந்திர... மேலும் பார்க்க