TN Budget 2025: ``ஆட்சி முடியும் தருவாயில், கவர்ச்சிகளை மட்டுமே கொண்ட வெற்று அறி...
பாலுக்கான ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தல்
பாலுக்கான ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவா் ஈசன் முருகசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பால் விலையை உயா்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவாா்கள் என்ற தவறான கருத்தைப் பரப்பி பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் நசுக்கப்படுகிறது.
நாள்தோறும் இரண்டு கோடி லிட்டா் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஆவின் 35 லட்சம் லிட்டா் கொள்முதல் செய்கிறது. எட்டு லட்சம் விவசாயிகள் பால் அளிக்கிறாா்கள். மாதந்தோறும் லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகையைத் தமிழக அரசு வழங்கி வந்தது.
நான்கு மாதங்களாக அந்த ஊக்கத்தொகையை வழங்கவில்லை. நிலுவையில் உள்ள ரூ.120 கோடிக்கும் அதிகமான ஊக்கத்தொகையை உடனடியாக வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால், கோரிக்கை நிறைவேறும் வரை சென்னையில் சட்டப்பேரவை முன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.