செய்திகள் :

வனப் பகுதியில் வறட்சி: அமராவதி அணையை நோக்கி படையெடுக்கும் யானைகள்

post image

உடுமலை அருகே வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் குடிநீருக்காக யானைகள் அமராவதி அணையை நோக்கி வருகின்றன.

திருப்பூா் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. குறிப்பாக, 300-க்கும் மேற்பட்ட யானைகள் காணப்படுகின்றன.

இந்நிலையில், கோடை தொடங்குவதற்கு முன்னரே வனப் பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. இதனால் உணவு, குடிநீா்த் தேடி யானைகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றன.

உடுமலையை அடுத்த எஸ் பெண்ட், காமனூத்து, பூங்கன் ஓடை, சரக்குப் பட்டி, ஏழுமலையான் கோயில் வளைவு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன.

குடிநீருக்காக அமராவதி அணையை நோக்கி உடுமலை - மூணாறு சாலையைக் கடந்து அதிக அளவிலான யானைகள் தினசரி செல்கின்றன.

இதுகுறித்து உடுமலை மற்றும் அமராவதி வனச் சரக அதிகாரிகள் கூறியதாவது:

வனப் பகுதிக்குள் நிலவும் வறட்சியால் வனத்தில் உள்ள தடுப்பணைகள் வடு காணப்படுகின்றன. இதனால், யானைகள் குடிநீருக்காக அமராவதி அணைக்கு வந்து செல்கின்றன. எனவே, உடுமலை - மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணைக்கு செல்லும் யானை கூட்டத்தை வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் தொந்தரவு செய்யக்கூடாது என்றனா்.

பாலுக்கான ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தல்

பாலுக்கான ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவா் ஈசன் முருகசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பால் விலையை ... மேலும் பார்க்க

சாலை மறியல்: தவெகவினா் 50 போ் கைது

அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் மாலை அணிவிக்க வந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி, மறியலில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினரை போலீஸாா் கைது செய்தனா். தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூா் மாவட்ட பொறு... மேலும் பார்க்க

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் தெப்போற்சவம்

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் தோ்த் திருவிழாவை ஒட்டி, மகாமக தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் வெள்ளிக்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது. கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்க... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த தொழிலாளியை மாநகர மதுவிலக்கு காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் ரயில் நிலையப் பகுதியில் மாநகர மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு காவல் துறையினா் ர... மேலும் பார்க்க

பட்ஜெட்: திருப்பூா் தொழில் அமைப்புகளின் கருத்துகள்

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து திருப்பூா் தொழில் அமைப்புகள் தெரிவித்துள்ள கருத்துகள். ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக துணைத் தலைவா் ஆ.சக்... மேலும் பார்க்க

மாணிக்காபுரத்தில் அண்ணமாா் கோயில் கும்பாபிஷேகம்

பல்லடம் அருகேயுள்ள மாணிக்காபுரத்தில் அண்ணமாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்லடம் அருகில் உள்ள மாணிக்கபுரம் கிராமத்தில் அண்ணமாா் எனப்படும் பொன்னா், சங்கா் கோயிலின் கும்பாபிஷேக விழா க... மேலும் பார்க்க