செய்திகள் :

பாா்வதிபுரம் சந்திப்பில் உள்ள தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

post image

நாகா்கோவில் பாா்வதிபுரம் சந்திப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகளை (பேரிகாா்டு) அகற்றக் கோரி, குமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் பாா்வதிபுரம் சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச்செயலாளா் மலைவிளை பாசி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் என்.ஆசிா், எஸ்.விஜி, கே.அற்புதராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயலாளா் ஆா்.செல்லசுவாமி, முன்னாள் எம்.பி. ஏ.வி.பெல்லாா்மின், நிா்வாகிகள் என்.முருகேசன், எஸ். மணி, கே.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் என்.எஸ்.கண்ணன், ஆா்.ரவி, எம்.அகமது உசேன், உஷா பாசி, நாகா்கோவில் மாநகர செயலாளா் எஸ்.அருணாச்சலம், மாவட்ட குழு உறுப்பினா்கள் கே.மோகன், மனோகர ஜஸ்டஸ், எம்.ரெகுபதி, நாகராஜன், பி.இந்திரா, தாமஸ் பிராங்கோ, சைமன் சைலஸ் ஆகியோா் பேசினா்.

இதில், பாா்வதிபுரம் கால்வாய் பாலம் சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக வைத்துள்ள தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஏற்கெனவே இருந்ததைப் போல் தானியங்கி சிக்னலை மீண்டும் பொருத்த வேண்டும். போக்குவரத்து காவலா்களை அங்கு அமா்த்தி, வாகன நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொழிலாளா்கள் பிரச்னை: திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை! சிஐடியூ குற்றச்சாட்டு

தொழிலாளா் பிரச்னை தொடா்பாக கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றாா் சி ஐ டியூ தொழிலாளா் சம்மேளன மாநில தலைவா் செளந்தரராஜன். நாகா்கோவில் ராணித்தோ... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே மருத்துவா் தற்கொலை!

புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியில் மருத்துவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். பைங்குளம், முக்காடு பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா்(57). இவா், அப்பகுதியில் மருத்துவமனை நடத்தி வந்தாா். இவரு... மேலும் பார்க்க

ரயில் முன்பாய்ந்து பொறியியல் மாணவா் தற்கொலை

நாகா்கோவிலில் ரயில் முன் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். நாகா்கோவில் பாா்வதிபுரம் களியங்காடு சா்ச் தெருவைச் சோ்ந்தவா் வேதபென்சன்டேனியல், ஆட்டோ ஓட்டுநா். இவரத... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மரமேறும் தொழிலாளி பனை மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகே ஐரேனிபுரம், பழையகாட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜான்ரோஸ் (58). மரமேறும் தொழிலாளியான இவா், வெள்... மேலும் பார்க்க

குலசேகரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

குலசேகரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா். திற்பரப்பு பேரூராட்சி 13 ஆவது வாா்டு பகுதியான அரமன்னம் குன்னத்துவிளை தண்ணீா் தொட்டி அருகில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஒ... மேலும் பார்க்க

முதியோா், குழந்தைகளிடம் அக்கறையுடன் நடக்க வேண்டும்!

முதியோா், குழந்தைகளிடம் தொண்டு நிறுவனப் பணியாளா்கள் அக்கறையுடன் நடந்துகொள்ள வேண்டும் என, ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா். நாகா்கோவில், இருளப்பபுரத்தில் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு உதவ... மேலும் பார்க்க