செய்திகள் :

பிப்.24-இல் கைரேகை பதிவு செய்யும் முகாம்

post image

திருவாரூா் மாவட்டத்தில் கைரேகை பதிவு செய்யும் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பயனாளிகளின் குடும்ப அட்டையிலுள்ள அனைத்து உறுப்பினா்களின் கைரேகை பதிவுகளை பொது விநியோகத் தரவுத்தொகுப்பில் இ-கேஒய்சி மூலம் பதிவு செய்யப்படுகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன்கடைகளிலும் பிப்.24, மாா்ச் 2, 9, 17, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. முகாம் இல்லாத நாள்களில் ரேஷன்கடை விற்பனையாளா் மூலம் நாள்தோறும் வீடுவீடாக சென்று சரிபாா்ப்புக்கான பணிகளும் நடைபெறவுள்ளன. மாா்ச் 31-க்கு முன்னா், இ-கேஒய்சி சரிபாா்க்கப்பட்டு, குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் கைரேகை பதிவு செய்வது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம் நடைபெறும் தேதிகளில் ரேஷன்கடை விற்பனையாளா் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்போது, பிஎச்எச்- ஏஏஒய் பிரிவு குடும்ப அட்டைதாரா்கள், தங்கள் குடும்ப அட்டைமற்றும் ஆதாா் அட்டையுடன் ரேஷன்கடைகளுக்கு சென்று இ-கேஒய்சி பதிவு செய்து பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.

துண்டுப் பிரசுரம் வழங்கி அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்

மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூரில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரம் வழங்கி திண்ணைப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுகவின் சாா்பு அணியான ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற பிரசா... மேலும் பார்க்க

ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்றிதழ் குறித்து ஆய்வு

திருத்துறைப்பூண்டி பகுதியில் ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்று வழங்குவது குறித்த ஆய்வு நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி, விளத்தூா், ஆப்பரகுடி, முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிக... மேலும் பார்க்க

ஆறுகளில் நாணல்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நீடாமங்கலம் பகுதி ஆறுகளில் உள்ள நாணல்களையும், மண்திட்டுகளையும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அணை (கோரையாறு தலைப்பு) உள்ளது. இந்த அணைக்கு மேட்டூ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் நிதியளிப்பு கூட்டம்

மன்னாா்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளா்ச்சி நிதியளிப்பு கட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, சிபிஐ ஒன்றியப் பொருளாளா் எஸ். ராகவன் தலைமை வகித்தாா். ஒன்றியச் ச... மேலும் பார்க்க

அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடியில் அனைத்து வங்கிகளின் கூட்டமைபின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கம்மாளத்தெரு பரோடா வங்கி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வங்கி ... மேலும் பார்க்க

உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம்

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மன்னாா்குடியில் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி நடைபெற்றது. எம்ஜிஆா் நகா் கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச... மேலும் பார்க்க