செய்திகள் :

பிரதமர் மோடியின் 38 வெளிநாட்டுப் பயணங்கள்! 3 ஆண்டுகளில் ரூ.259 கோடி செலவா?

post image

கடந்த 2022 முதல் 2024 ஆம் ஆண்டு இறுதி வரை பிரதமர் மோடி மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்துக்கு மொத்தமாக ரூ.259 கோடி செலவானதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமரின் அரசுமுறை வெளிநாட்டுப் பயணங்களுக்கான ஏற்பாடுகளுக்காக இந்திய தூதரகங்கள் செலவிட்ட தொகை குறித்த தகவலை மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே கோரிக்கை வைத்திருந்தார். மேலும், அவருக்கான தங்குமிடம், போக்குவரத்து ஏற்பாடுகள், சமூக வரவேற்புகள் மற்றும் இதர செலவுகள் என விரிவான விவரங்களையும் கோரியிருந்தாா்.

கார்கேவின் கோரிக்கையை ஏற்ற மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் பபித்ரா மார்ஹெரிட்டா எழுத்துப்பூர்வமாக அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார்.

இதையும் படிக்க: லக்னௌ அணியில் இணையும் ஷர்துல் தாகுர்? மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போனவர்!

அந்த அறிக்கையில், 2022 ஆம் ஆண்டு மே முதல் கடந்த ஆண்டு டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் பிரதமா் மேற்கொண்ட அரசுப் பயணங்களுக்கான செலவின விவரங்கள், ஜொ்மனி முதல் குவைத் வரை 38 பயணங்கள் வாரியாக மத்திய அரசின் பதில் பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக கிட்டத்தட்ட ரூ.259 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செலவுகள் தங்குமிடம், இடத்துக்கான கட்டணம், பாதுகாப்பு, போக்குவரத்து, இதர செலவீனங்கள் என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தங்குமிடத்துக்காக ரூ.104 கோடியும், இதர செலவுகளாக ரூ.75.7 கோடியும், போக்குவரத்துக்கு ரூ.71.7 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

தனிப்பட்ட நாடுகளுக்கான செலவுகளாக அமெரிக்கா (ரூ.38.2 கோடி), ஜப்பான் (ரூ.33 கோடி), ஜெர்மனி (ரூ.23.9 கோடி), ரஷியா (ரூ.16.1 கோடி), பிரான்ஸ் (ரூ.15.7 கோடி), இத்தாலி (ரூ.14.4 கோடி) மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (ரூ.12.7 கோடி) செலவிடப்பட்டுள்ளது.

இந்த மூன்று ஆண்டுகாலத்தில் தனி நபருக்கான அதிகபட்ச செலவாக 2023 ஆம் ஆண்டு அமெரிக்க பயணத்துக்கு மட்டும் ரூ.22.89 கோடியும், குறைந்தபட்ச செலவாக நேபாள பயணத்துக்கு ரூ.80.01 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி 2022 ஆம் ஆண்டில் 8 நாடுகளுக்கும், 2023-ல் 10 நாடுகளுக்கும், 2024-ல் 16 நாடுகளுக்கும் அரசு முறைப் பயணமாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கொல்கத்தாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! ஐபிஎல் தொடக்கப் போட்டிக்கு மழையால் பாதிப்பா.?

கடந்த நிதியாண்டில் 48 நாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்த இந்தியா!

புதுதில்லி: தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கீழ் 2023-24ல் இந்தியா மொத்தம் 48 நாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித... மேலும் பார்க்க

கர்நாடகம்: மனைவி உள்பட 4 பேரை குத்திக் கொன்ற நபரால் பரபரப்பு

கர்நாடகத்தில் மனைவி உள்பட 4 பேரை குத்திக் கொன்ற நபரால் பரபரப்பு நிலவியது. கர்நாடக மாநிலம், பொன்னம்பேட்டை வட்டத்தில் உள்ள பேகுரு கிராமத்தில் கிரிஷ் (35) என்பவர் தனது மனைவி நாகி (30), அவரது ஐந்து வயது ம... மேலும் பார்க்க

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2% உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தலைநகர் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் நீதிமன்றத்துக்கு மாற்றம்

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான உத்தரவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அரசு இது குறித்து வெளியிட்டிருக்கும் அதிகாரப்... மேலும் பார்க்க

உ.பி. : மாணவியர் விடுதியில் தீ விபத்து; சிறுமி காயம்

கிரேட்டர் நொய்டாவில் மாணவியர் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிறுமி காயமடைந்தார். உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பெண்கள் விடுதியில் வியாழக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் க... மேலும் பார்க்க

சுதந்திரத்தைப் பாதுகாத்த நமது தியாகிகளுக்கு கடமைப்பட்டுள்ளோம்: பிரியங்கா

தியாகிகள் செய்த தியாகங்கள் இன்று நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்தார். மூன்று நாள் பயணமாக வயநாடு வந்துள்ள பிரியங்க... மேலும் பார்க்க