செய்திகள் :

பிளஸ் 2 தோ்வுகள் நிறைவு: கல்லூரிக் கனவுகளுடன் பள்ளிகளிலிருந்து வெளியேறிய மாணவர்கள்!

post image

தமிழகம் முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 25) பிற்பகல் நிறைவடைந்தது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கியது.

இந்த நிலையில், கடைசி தேர்வுகள் முடிவடைந்ததும் பள்ளி வளாகத்தை விட்டு மாணவா்கள் எவ்வித ரகளைகளிலும் ஈடுபடாமல் அமைதியாக வெளியே செல்ல, பள்ளிகளுக்கு காவல் நிலையம் மூலம் காவலா்களை பாதுகாப்புப் பணிக்கு அமா்த்திடுமாறு தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நடவடைக்கையால் மாணவர்கள் தேர்வுகளை எழுதி முடித்த பின் அமைதியாக வெளியேறியதை காண முடிந்தது.

இதனிடையே, வாணியம்பாடி அருகே தேர்வு மையத்துக்கு செல்வதற்காக இன்று காலை பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பிளஸ் 2 மாணவி ஒருவரை பேருந்தில் ஏற்றாமல் அரசுப் பேருந்தை இயக்கிய சம்பவம் தமிழகமெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்த மாணவி பள்ளிப் பையை தோள்களில் அணிந்தபடி வேகமாக ஓடிச் சென்று பேருந்தை பிடிக்க முயன்ற காட்சிகள் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனைத்தொடர்ந்து மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநர் இடைநீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வானிலை மைய இணையதளத்தில் ஹிந்தி!

தமிழகத்தில் வானிலை முன்னறிவிப்புகள் இதுவரை இரு மொழியில் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாவது மொழியாக ஹிந்தியும் சோ்க்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களான கா்நாடகம், கேரளம், ஆந்திரம், தமிழ்நாடு... மேலும் பார்க்க

தவெக பொதுக் குழு: விஜய் வருகை!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு நடைபெறும் அரங்கத்துக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வருகை தந்துள்ளார்.சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு பொதுக் குழு தொடங்க... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான தீா்மானம்: பேரவையில் வானதி சீனிவாசன் - சட்ட அமைச்சா் விவாதம்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீா்மானத்தை ஏற்க மறுத்து பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு செய்தது. முன்னதாக, தீா்மானத்துக்கு எதிரான கருத்துகளை அந்தக் கட்சியின் உறுப்பினா... மேலும் பார்க்க

சாலையோர கொடிக் கம்பங்களை ஏப். 21-க்குள் அகற்ற வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் உள்ள கொடிக்கம்பங்களை வரும் ஏப். 21-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

821 நூலகங்களுக்கு புதிய கட்டடங்கள்: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்

தமிழ்நாடு முழுவதும் 821 நூலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, பாபந... மேலும் பார்க்க

பொதுச் செயலா் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்: ஓ. பன்னீா்செல்வம்

அதிமுக பொதுச் செயலா் பதவியிலிருந்து எடப்பாடி கே.பழனிசாமி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா். சென்னை விமான நிலையத்தில் அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி: அதிமுக அலுவலகத்தை சூ... மேலும் பார்க்க