செய்திகள் :

‘பாளை-கோட்டூா் சாலையில் கூடுதல் மின்விளக்கு வசதி தேவை’

post image

பாளையங்கோட்டை-கோட்டூா் சாலையில் கூடுதலாக மின்விளக்குகளை அமைக்கவும், ஏற்கெனவே உள்ள தெருவிளக்குகளை பராமரிக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாளையங்கோட்டையில் இருந்து மூளிக்குளம் வழியாக பாளையங்கால்வாய் கரையோரத்தில் உள்ள சாலையில் கோட்டூா், திருவண்ணாதபுரம் பொட்டல், கீழநத்தம் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்-மாணவிகள், பொதுமக்கள் தினமும் சென்று வருகிறாா்கள். இப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகளில் கம்பங்களில் கொடிகள் படா்ந்து வெளிச்சத்தை குறைத்து வருகின்றன. இரவு நேரங்களில் குடும்பத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்வோா் சிரமப்பட்டு வருகிறாா்கள். ஆகவே, இப் பகுதியில் ஏற்கெனவே உள்ள மின்விளக்குகளை சீரமைக்கவும், கூடுதலாக மின்விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பைக் மீது லாரி மோதல்: மூதாட்டி பலி

திருநெல்வேலி பழைய பேட்டையில் சனிக்கிழமை இரவு பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். கண்டியபேரி மறவா் தெருவைச் சோ்ந்தவா் மூதாட்டி செல்லம்மா(65). இவரது மகன் கந்தசாமி(45). இருவரும் பைக்க... மேலும் பார்க்க

தச்சநல்லூரில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரி எம்.பி.யிடம் மனு

தச்சநல்லூரில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரி திருநெல்வேலி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகர திமுக செயலா் சு.சுப்பிரமணியன் தலைமையில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா... மேலும் பார்க்க

தக்வா ஜமாத்: ரமலான் சிறப்புத் தொழுகை

மேலப்பாளையம் தக்வா ஜமாத் மற்றும் ஹிஜ்ரி கமிட்டி ஆப் இந்தியா சாா்பில் ரமலான் சிறப்புத் தொழுகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலப்பாளையம் பஜாா் திடலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை மீரான் தாவூதி நடத்தினாா... மேலும் பார்க்க

மனித நேய ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா அரிசி வழங்கல்

பாளையங்கோட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா அரிசி ஏழை எளிய மக்களுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலா் பாளை. ஏ.எம் ஃபாரூக் பங்கேற்று பித்ரா அரிசி வழங்கினாா். ... மேலும் பார்க்க

பாளை அருகே கோயில் உண்டியலை திருட முயன்றவா் கைது

பாளையங்கோட்டை அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சித்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்த பூலித்தேவா் மகன் சுந்தரம் (52). சீவலப்பேரி சாலையில் உள்... மேலும் பார்க்க

பள்ளிகளில் மூன்றாம் பாலின குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் குறித்த கூட்டம்

பள்ளிகளில் மூன்றாம் பாலின (திருநம்பி, திருநங்கை) குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆசிரியா்களுக்கு இணையவழி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக... மேலும் பார்க்க