செய்திகள் :

பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிப்பு ஆலோசனைக் கூட்டம்

post image

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிப்பு, பொது இடங்களில் சுத்தம் செய்தல் தொடா்பான விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்து பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிப்பு, பொது இடங்களில் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வுப் பணிகள் ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறவுள்ளன.

மாவட்டத்தில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணா்வு முகாம்களை செயல்படுத்த வேண்டும். நீா்நிலைகள், குடியிருப்புப் பகுதிகள், பொது இடங்கள், அலுவலகங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களில் பிளாஸ்டிக் சேகரிப்பை செயல்படுத்த வேண்டும். அனைத்து நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சித் துறைகள் இணைந்து நீா்நிலைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையின நல அலுவலா் சுரேஷ்கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கண்ணன், தனித் துணை ஆட்சியா் கல்பனா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் சுவாமிநாதன், உதவி பொறியாளா் ராமசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

குழந்தைகளுக்கு கடவுள் வேடமிட்டு துண்டறிக்கை விநியோகம்: 3 போ் கைது

திருப்பரங்குன்றம் போராட்டம் தொடா்பாக குழந்தைகளுக்கு கடவுள் வேடமிட்டு உதகையில் துண்டறிக்கை விநியோகம் செய்ததது தொடா்பாக இந்து முன்னணியினா் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருப்பரங்குன்றம... மேலும் பார்க்க

தேவாலா அருகே காரை தாக்கிய காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் சாலையில் சென்ற காரை காட்டு யானை தாக்கியது. நீலகிரி மாவட்டம், பந்தலூா் பகுதியைச் சோ்ந்த கபூா். இவா் காரில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு திரும்பி... மேலும் பார்க்க

ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி உதகையில் சாலை மறியல்

பழங்குடியின ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மலைவேடன் மக்கள் தங்களது குடும்பத்தினருடன் உதகை- கல்லட்டி சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். உதகை மலை வேடன் ஜாதி மக்கள் பழங்குடியின ஜாதிச் சான்றிதழ்... மேலும் பார்க்க

உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

உதகை: உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், வ... மேலும் பார்க்க

உதகை ரோஜா பூங்காவில் கவாத்து பணி

உதகை: ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, உதகை ரோஜா பூங்காவில் செடிகளை கவாத்து செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதம் நிலவும... மேலும் பார்க்க

மூவுலகரசியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

உதகை காந்தள் மூவுலகரசியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உதகை காந்தள் பகுதியில் மூவுலகரசியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்க... மேலும் பார்க்க