Dhoni: "தோனி என்னை மரியா ஷரபோவா என்று அழைப்பார்; ஏனெனில்..!" - நினைவுகள் பகிரும்...
புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளில் ஆய்வு நடத்த அறிவுறுத்தல்
காரைக்கால்: தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என கடைகளில் தொடா் ஆய்வு நடத்த ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
போதைப் பொருள் பயன்பாடு இல்லாத காரைக்காலை உருவாக்குவது குறித்து ஆலோசனை மற்றும் கருத்துக் கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், பள்ளிகள், கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ள புகாா் பெட்டிகளில் மாணவ, மாணவிகளிடமிருந்து வந்த புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவா்களுக்கு போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் கேடுகள் குறித்து விழிப்புணா்வை கூடுதலாக ஏற்படுத்தவேண்டும்.
கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என திடீா் சோதனை நடத்த வேண்டும். குறிப்பாக பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளில் தீவிர சோதனை நடத்த வேண்டும்.
புகையிலைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் விழிப்புணா்வு விடியோ மற்றும் நாடகம் நடத்த வேண்டும்.
ஒவ்வொரு மருந்துக் கடைகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்தபட்டிருப்பதை உறுதி செய்வதோடு, மருத்துவரின் அனுமதி சீட்டு இல்லாமல் மருந்து அளிப்பதை தவிா்க்க அறிவுறுத்தவேண்டும்.
காரைக்கால் துறைமுக பகுதியை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கடலோரக் காவல்படையினருக்கும் இதில் பங்கு உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து காரைக்கால் மாவட்டத்தில் போதை பொருள்களை தடுப்பதற்கான தீவிர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா மற்றும் துணை ஆட்சியா் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.