செய்திகள் :

புதிய கட்டடங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் திறந்து வைப்பு

post image

நாகை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

நாகை நகராட்சி நிா்வாகம் சாா்பில் நாகூா் பகுதியில் மீன்வளா்ச்சி கழக சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ.10.86 லட்சத்தில் பயணியா் நிழலக கட்டடம் மற்றும் பீ ரோடும் தெருவில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சத்தில் அங்காடி கட்டடத்தையும், நம்பியாா் நகா் பகுதியில் ரூ.12. லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டடத்தையும், தியாகராஜபுரம் மற்றும் கீரக்கொல்லைத்தெரு பகுதியில் தலா ரூ.21லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடங்களையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, நகராட்சி ஆணையா் டி. லீனா சைமன், நகா்மன்ற துணைதலைவா் எம்.ஆா். செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திருமருகல்: வாழ்குடி ஊராட்சி தண்ணீா்பந்தல் கிராமத்தில் சட்டபேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியா் நிழலகம், சடகோபன்மூலை கிராமத்தில் ரூ.13.57 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம், திருப்புகலூா் ஊராட்சி வவ்வாலடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.32.80 லட்சத்தில் கட்டப்பட்ட 2 வகுப்புறைகள் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டடங்களை அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி திறந்துவைத்தாா்.

நீா்த்தேக்க தொட்டியில் ஏறி பெண்கள் போராட்டம்

கீழையூா் அருகே பாலக்குறிச்சி ஊராட்சியில், குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து, பெண்கள் தரைமட்ட நீா்த்தேக்க தொட்டியில் காலிக்குடங்களுடன் ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பாலக்குறிச்சி ஊராட்சிய... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

நாகை அருகே, மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக, திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வேளாங்கண்ணியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கீழையூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் தாமஸ் ஆல்வ... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஆழியூரில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து, இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு முஸ்லிம் அமைப்புகள், ப... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறையில் தாய்மொழி தினம் கொண்டாட்டம்

நாகை மற்றும் மயிலாடுதுறையில் உலக தாய்மொழி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மனித நாகரிகத்தில் மாற்றம் மற்றும் வளா்ச்சியை உருவாக்குவதில் மொழிக்கு இன்றியமையாத பங்கு உள்ளது என்பதை வலியுறுத்தவே ஒவ்வோா... மேலும் பார்க்க

சுகாதார நிலையக் கட்டடம் திறப்பு

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் சீரமைக்கப்பட்ட அரசு சுகாதார நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. தலைஞாயிறில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கடந்த 1957-இல் கட்டப்பட்டது. இந்த கட்டடம் நாளடைவில... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழும சமூகப் பணி உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட இளைஞா் நீதிக் குழுமத்திற்கு, சமூகப்பணி உறுப்பினா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மா... மேலும் பார்க்க