செய்திகள் :

`புது தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் உறுதி...' - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

post image

புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படாது எனக் காட்டமாக தெரிவித்திருக்கும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்து, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. புதியக் கல்விக் கொள்கை இந்தியை திணிக்கிறது, குலக் கல்வியை ஆதரிக்கிறது, மூன்றாம், ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை நடத்தக் கட்டாயப்படுத்துகிறது, தொழிற்கல்விக்கு வழிகாட்டுகிறது உள்ளிட்ட விமர்சனங்களுக்கு உள்ளானது. அதனால், புதியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காது என உறுதியாக மறுத்து வருகிறது தி.மு.க.

ஸ்டாலின் - தர்மேந்திர பிரதான்

இதற்கிடையில்தான் மத்திய கல்வித்துறை அமைச்சரின் கருத்துகள் சர்ச்சையானது. இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ``மாணவர்களிடையே போட்டியை உருவாக்க, ஒரு சமமான நிலையை உருவாக்க, நாம் ஒரு பொதுவான தளத்திற்கு வர வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை என்பது புதிய லட்சிய பொது தளமாகும். நான் அனைத்து மொழிகளையும் மதிக்கிறேன். பிரதமர் மோடியால் கற்பனை செய்யப்பட்ட இந்த தேசியக் கல்விக் கொள்கை, தாய்மொழிக்கு முக்கியத்துவமளிக்கிறது. தமிழ் நமது நாகரிகத்தின் பழமையான மொழிகளில் ஒன்றாகும்.

ஆனால் தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கல்வியில் பன்மொழி அம்சத்தைக் கற்றுக்கொண்டால் என்ன தவறு? அது தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளாக இருக்கலாம். அவர்கள் மீது இந்தி அல்லது வேறு எந்த மொழியையும் திணிக்க முடியாது. தமிழ்நாட்டில் சில நண்பர்கள் அரசியல் செய்கிறார்கள். ஆனால் இந்திய அரசு தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்த உறுதியாக இருக்கிறது" என்றார்.

NEP: "நீங்கள் வந்து வளர்ப்பீர்கள் எனத் தமிழ் கையேந்தி நிற்கவில்லை" - மத்திய அரசைச் சாடிய முதல்வர்

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பணிக்காக நேற்றும், இன்றும் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் ரூ.1,476 கோடி... மேலும் பார்க்க

FBI-ன் இயக்குநர்; இந்திய வம்சாவளி; பகவத் கீதை வைத்து பதவிப் பிரமாணம் - யார் இந்த Kash Patel?

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை (kash-patel) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்திருக்கிறார்.அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவ... மேலும் பார்க்க

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் விவகாரம்: "வீடியோக்களை நீக்குக" - எக்ஸ் தளத்துக்கு ரயில்வே நோட்டீஸ்

புது டெல்லி ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி தொடர்பாக வெளியான 285 வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது. எக்ஸ் தளத்தில் இக்கோரிக்கை வைத்து... மேலும் பார்க்க

"என்னைச் சாதாரணமாக நினைக்காதீர்; உத்தவ் அரசையே கவிழ்த்தவன்..." - முற்றும் ஷிண்டே - பட்னாவிஸ் மோதல்!

மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவியிலிருந்து விலக ஏக்நாத் ஷிண்டே மறுத்தார். ஆனால் பா.ஜ.க அவரைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து விலகச் செய்த... மேலும் பார்க்க

CBSE: மாநில அரசின் அதிகாரம் பறிப்பு? சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விதிமுறையில் மாற்றம்

மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்கலாம் என்று மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் அறிவித்திருக்கிறது.தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக, மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே பிர... மேலும் பார்க்க

Veena Reddy: USAID நிதியை நிறுத்திய ட்ரம்ப்... பாஜக எம்.பி குறிப்பிட்ட வீணா ரெட்டி; யார் இவர்?

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா USAID மூலம் நிதியுதவி செய்து வருகிறது. அதில் இந்தியாவும் ஒன்று. 1950 களில் இந்தியாவின் வாக்களிப்போர் சதவிகிதம் சொல்லிக்கொள்ளுமளவு இல்லை. அதனால், இந்தியாவி... மேலும் பார்க்க