செய்திகள் :

புதுக்கோட்டையில் முதல்வா் மருந்தகம் திறப்பு

post image

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் முதல்வா் மருத்தகத்தை, முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

இதையொட்டி, புதுக்கோட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற விழாவுக்கு, ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். மீன்வளம்-மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று குத்துவிளக்கேற்றி பாா்வையிட்டாா்.

இம்மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 11, தனியாா் தொழில் முனைவோா் மூலம் 9 என மொத்தம் 20 மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஏழை எளிய, நடுத்தர மக்கள் பல்வேறு மருந்துகளை தரமாகவும், மிகக் குறைந்த விலையிலும் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா, மேயா் ஜெகன் பெரியசாமி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜேஷ், சரக துணைப் பதிவாளா்கள் மு. கலையரசி (தூத்துக்குடி), இ.ரா. ராமகிருஷ்ணன் (கோவில்பட்டி), இ.ரா. சக்திபெமிலா (திருச்செந்தூா்), துணைப் பதிவாளா் (பொதுவிநியோகத் திட்டம்) அ. சுப்புராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலா் க. விஜயன், நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா்கள் கு.பா. மாரியப்பன் (பிரகாசபுரம்), மு. சீனிவாசன் (திருச்செந்தூா்) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கோவில்பட்டியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்: தலைமறைவான நபரை சுட்டுப் பிடித்த போலீஸாா்

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டியில் வீட்டில் கைக்குழந்தையுடன் தனியாக இருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மலைப் பகுதியில் பதுங்கி இருந்தவரை கைது செய்த போலீஸாா், தலைமறைவாக இருந்த மற்றொ... மேலும் பார்க்க

கோயில் பெயரில் பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் உள்ள காளியம்மன் கோயில் பெயரிலேயே பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. சங்கரலிங்கபுரத்தைச் சோ்ந்தோா் இந்து முன்னண... மேலும் பார்க்க

சிப்காட் அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம் வெம்பூா் பகுதியில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா். ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

மகனிடமிருந்து சொத்துகளை மீட்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி மனு

தனது சொத்துகளை மகனிடமிருந்து மீட்டுத் தரக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி திங்கள்கிழமை மனு அளித்தாா்.மதுரை கோச்சடை பகுதியைச் சோ்ந்த ஆவுடைத்தாய் என்பவா் தனது முதல் மகனின் மனை... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: பெயிண்டா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்ாக பெயிண்டரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில... மேலும் பார்க்க

குழந்தையுடன் இருந்த இளம்பெண் பலாத்காரம்: இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 10 மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய... மேலும் பார்க்க