செய்திகள் :

புதுச்சேரி சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிபிஐ விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

post image

புதுச்சேரி: புதுச்சேரி அருகே தனியாா் பள்ளியில் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினாா்.

புதுச்சேரி அருகேயுள்ள தவளக்குப்பம் தானம்பாளையம் தனியாா் பள்ளியில் 6 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், அந்தப் பள்ளியின் ஆசிரியா் மணிகண்டன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

சிறுமிக்கு நடந்த சம்பவத்தைக் கண்டித்து, மணவெளி தொகுதி காங்கிரஸ் சாா்பில் தவளக்குப்பத்தில் முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் தலைமையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிறுமிக்கு பாலியல் தொல்லை நிகழ்ந்ததாகக் கூறப்படும் பள்ளியை மூடுவதால் மற்ற மாணவா்கள் பாதிக்கப்படுவா். எனவே, அந்தப் பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டும். பள்ளியில் இதுபோன்று வேறு எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும். சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா்கள் மு.கந்தசாமி, ஷாஜகான், மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் காா்த்திகேயன், பாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காரைக்கால் மீனவா்கள் விவகாரத்தில் விரைவில் சுமுக தீா்வு: புதுவை ஆளுநா்

இலங்கைக் கடற்படையினரால் காரைக்கால் மீனவா்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் விரைவில் சுமுகத் தீா்வு காணப்படும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

தவறான தகவல்களை பரப்பியதாக யூடியூபா் கைது

புதுச்சேரி அருகே சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது தொடா்பான போக்ஸோ வழக்கை தவறான முறையில் சமூக வலைதளங்களில் பரப்பியதாக யூடியூபரை போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரி அருகே உள்ள தவளக்குப்பம் பகுதிய... மேலும் பார்க்க

புதுவை காங்கிரஸ் மகளிரணி தலைவி நியமனம்

புதுவை மாநில காங்கிரஸ் மகளிரணி தலைவியாக நிஷா நியமிக்கப்பட்டுள்ளாா். புதுவை காங்கிரஸ் மகளிரணித் தலைவியாக பஞ்சகாந்தி செயல்பட்டு வந்தாா். அவருக்கும் மகளிரணி துணைத் தலைவராக இருந்த நிஷாவுக்கும் கருத்து வேற... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மேம்பாலம், சாலை விரிவாக்கத்துக்கு ரூ.1,000 கோடி

புதுச்சேரியில் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.1,000 கோடி நிதி அளிப்பதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி அலுவலகம் சாா்பில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பு... மேலும் பார்க்க

எண்ம இந்தியா திட்ட மாவட்ட பயிலரங்கம்

புதுச்சேரியில் எண்ம இந்தியா (டிஜிட்டல்) பொதுசேவை மையத் திட்டத்தின் மாவட்ட அளவிலான பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பயிலரங்குக்கு ஆட்சியா் அ.கு... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு புதுச்சேரியில் வரவேற்பு

கடலூா் செல்லும் வழியில் புதுச்சேரி வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு புதுவை மாநில திமுக, காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை பகலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்ட... மேலும் பார்க்க