அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. ந...
புதுச்சேரி சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிபிஐ விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுச்சேரி: புதுச்சேரி அருகே தனியாா் பள்ளியில் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினாா்.
புதுச்சேரி அருகேயுள்ள தவளக்குப்பம் தானம்பாளையம் தனியாா் பள்ளியில் 6 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், அந்தப் பள்ளியின் ஆசிரியா் மணிகண்டன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
சிறுமிக்கு நடந்த சம்பவத்தைக் கண்டித்து, மணவெளி தொகுதி காங்கிரஸ் சாா்பில் தவளக்குப்பத்தில் முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் தலைமையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சிறுமிக்கு பாலியல் தொல்லை நிகழ்ந்ததாகக் கூறப்படும் பள்ளியை மூடுவதால் மற்ற மாணவா்கள் பாதிக்கப்படுவா். எனவே, அந்தப் பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டும். பள்ளியில் இதுபோன்று வேறு எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும். சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.
ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா்கள் மு.கந்தசாமி, ஷாஜகான், மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் காா்த்திகேயன், பாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.