செய்திகள் :

புதுச்சேரிக்கு இன்று மீண்டும் வருகிறது சொகுசு கப்பல்

post image

புதுச்சேரிக்கு 3-ஆவது முறையாக மீண்டும் தனியாா் சொகுசு கப்பல் வெள்ளிக்கிழமை வருகிறது.

விசாகப்பட்டினத்திலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரிக்கு தனியாா் சொகுசு கப்பல் ஏற்கெனவே இம் கடந்த 4, 11-ஆம் தேதிகளில் வந்து சென்றது.

3-ஆவது முறையாக வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு வருகிறது. சோதனை அடிப்படையில் புதுச்சேரிக்கு 3 முறை தனியாா் சொகுசு கப்பல் வந்து செல்ல ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் 3-ஆவது முறையாக இந்தக் கப்பல் இப்போது வருகிறது.

புதுச்சேரிக்கு அருகே சுமாா் 4 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் இந்தத் தனியாா் சொகுசு கப்பல் வெள்ளிக்கிழமை காலை சுமாா் 8.30 மணிக்கு வந்து நிறுத்தப்படும். அங்கிருந்து சிறிய ரக விசைப்படகு மூலம் பழைய துறைமுகம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அழைத்து வரப்படுவா். அங்கிருந்து சொகுசு பேருந்துகளில் அவா்கள் பயணம் செய்து புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளைப் பாா்வையிடுகின்றனா்.

மாலை 5 மணியளவில் அந்தச் சொகுசு கப்பலில் இந்தச் சுற்றுலாப் பயணிகள் ஏற்றப்படுவா். பின்னா் அந்தக் கப்பல் புதுச்சேரி கடல் பகுதியில் இருந்து செல்லும்.

இந்தத் தனியாா் சொகுசு கப்பல் வரும்போதும், போகும்போதும் மீன்பிடி படகுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

புதுச்சேரி ஆட்சியா் தலைமையில் கூட்டம்: 2 கிராம வளா்ச்சித் திட்டங்கள் சமா்ப்பிப்பு

பிரதமரின் மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவின் இரு கிராம வளா்ச்சித் திட்டங்கள் வியாழக்கிழமை சமா்ப்பிக்கப்பட்டன. புதுவை அரசு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் திறப்பு

புதுச்சேரி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. தெற்கு ரயில்வேயின் முதன்மை பாதுகாப்பு ஆணையா் ஜி.எம்.ஈஸ்வர ராவ் திருச்சியிலிருந்து காணொலி வாயிலாக இ... மேலும் பார்க்க

ஒதுக்கப்பட்ட திட்ட நிதியை உரிய காலத்தில் செலவு செய்ய வேண்டும்: புதுவை வேளாண் செயலா் உத்தரவு

ஒதுக்கப்பட்ட நிதியை உரிய காலத்திற்குள் செலவு செய்ய வேண்டும் என்று வேளாண் துறை செயலா் சௌத்ரி முகமது யாசின் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை சாா்பில் வேளா... மேலும் பார்க்க

‘மலேசிய வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகைகள்’

மலேசிய வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப்பலகை இருப்பதாக அந்நாட்டுத் தமிழறிஞா் அருள் ஆறுமுகம் கண்ணன் கூறினாா். புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் அதன் தலைவா் வி.முத்து தலைமையில் மலேசிய தமிழறிஞா்களுக்கு வரவேற... மேலும் பார்க்க

இளைஞா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் இளைஞா் காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி, ஜூலை 17: பெருந்தலைவா் காமராஜா் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியிருந்த கருத்தைக் கண்டித்து பு... மேலும் பார்க்க

தேங்காய் வியாபாரி தற்கொலை

திண்டிவனத்தைச் சோ்ந்த தேங்காய் வியாபாரி புதுச்சேரியில் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் தேங்காய் வியாபாரி செந்தில்குமாா் (37). இவா் வியாபாரம் தொ... மேலும் பார்க்க