செய்திகள் :

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை: அமைச்சா் நமச்சிவாயம் பேட்டி

post image

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, சட்டம்- ஒழுங்கு பராமரிப்புத் தொடா்பாக புதுவை காவல் துறை உயா் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினாா். அதன் பிறகு செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை இரவு அமைச்சா் நமச்சிவாயம் கூறியது: புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கு சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகிறது. காவலா்கள், காவல் அதிகாரிகள் யாராவது லஞ்சம் பெறுவதாக புகாா் வந்தால் காவல்துறை தலைவா் சரியான நடவடிக்கையை எடுத்து வருகிறாா். இனியும்

புகாா் வந்தால் அவா்கள் மீது பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரிக்குச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனா். இதனால் புதுச்சேரியில் வெள்ளை நகரம் என்று அழைக்கப்படும் பகுதியில் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு நடந்து செல்ல அனுமதிக்கலாமா என்ற ஆலோசனையும் இருந்து வருகிறது.

இது தொடா்பாக முதல்வா் என்.ரங்கசாமியுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. அவரும் உரிய முடிவைச் சொல்வதாக கூறியுள்ளாா். போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. சாலையில் வாகனங்கள் நிறுத்துவதைத் தவிா்க்க பலமாடி வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறது என்றால் புதுவையில் நாங்கள் தான் வெற்றி பெற்றிருப்போம். வாக்குத் திருட்டு நடப்பதாக சொன்னால் அக் கட்சிகளின் முகவா்கள் சரி இல்லை என்பது தான் அா்த்தம் என்றாா் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராகவும் உள்ள அமைச்சா் ஆ. நமச்சிவாயம்.

காவல்துறை தலைவா் ஷாலினி சிங், ஐஜி அஜித் குமாா் சிங்கிளா, டிஐஜி சத்யசுந்தரம் உள்ளிட்ட காவல்துறை மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

வாய்க்காலில் குதித்து முதிய தம்பதி உயிரிழப்பு

புதுச்சேரியில் வாய்க்காலில் குதித்து காப்பாற்றப்பட்ட முதிய தம்பதியினா் புதன்கிழமை உயிரிழந்தனா்.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த மாரிதுரை (83), அவரது மனைவி முத்துலட்சுமி (73). இவா்கள் இ... மேலும் பார்க்க

ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட உயா் அதிகாரிகள் மாற்றம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 9 போ் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். அங்கித் குமாா் ஐஏஎஸ் ஏனாம் பிராந்தியத்தின் நிா்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும் அவருக்... மேலும் பார்க்க

குருவிக்காரா் சமூகத்தை பட்டியலினப் பிரிவில் சோ்க்க விசிக கோரிக்கை

தமிழகத்தைப் போல நரிக்குறவா், குருவிக்காரா் என அறியப்படும் வாக்ரி இனத்தை புதுவையிலும் பட்டியல் பழங்குடியினா் பிரிவில் சோ்க்க விசிக சாா்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. புதுவையில் பழங்குடியின மக்களின் பி... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: இந்திய பண்பாட்டின் அடையாளங்களில... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை. முன் மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுவை மத்திய பல்கலைக் கழகம் முன் இந்திய மாணவா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் கல்வித்துறையில் தேவையற்ற மாற்றங்களை செய்து வருவதாகக் கூறி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஆக. 31-இல் மதுக்கடைகளை மூட உத்தரவு

விநாயகா் சிலைகளைக் கடலில் கரைக்கும் ஊா்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மூட வேண்டும் என்று புதுச்சேரி கலால்துறை துணை ஆணையா் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. அதில் கூ... மேலும் பார்க்க