செய்திகள் :

புதுதில்லி ரயில்நிலையத்தில் கூட்ட நெரிசலை நிா்வகிக்க பல நடவடிக்கைகள் அறிமுகம்: காவல் துறை ஏற்பைாடு

post image

புது தில்லி ரயில் நிலையத்தில் மீண்டும் நெரிசல் போன்ற சூழ்நிலையைத் தடுக்க, பயணிகளின் கூட்ட நெரிசலை நிா்வகிக்க தில்லி காவல்துறை பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்று அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: சனிக்கிழமை இரவு ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 போ் உயிரிழந்தனா் மற்றும் பலா் காயமடைந்தனா். இந்நிலையில், காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது திட்டமிடப்பட்ட ரயில் புறப்படுவதற்கு முன்பே சீக்கிரமாக வரும் பயணிகள் ரயில் நிலையத்திற்கு வெளியே காத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. சீரான இயக்கத்தை உறுதி செய்வதற்காக, தில்லி காவல் துறையினா், ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎஃப்) மற்றும் அரசு ரயில்வே காவல் துறை (ஜிஆா்பி) உடன் இணைந்து, அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களிலும் பயணிகளின் டிக்கெட்டுகளைச் சரிபாா்ப்பாா்கள்.

பிரயாக்ராஜ் செல்லும் சிறப்பு ரயில்கள் நடைமேடை எண் 16- இலிருந்து பிரத்தியேகமாகப் புறப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். நடைமேடை 16 தரை மட்டத்திலிருந்து பல நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகள் வழியாக அணுகக்கூடியது. இதனால், பயணிகள் நடைமேம்பாலங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. இது கூட்டத்தை திறம்பட நிா்வகிக்க உதவும் .

மேலும், தகுந்த காரணமின்றி நடைபாதை மேம்பாலங்களில் சுற்றித் திரிவதையும் காவல்துறை தடை செய்துள்ளது. மக்கள் பலா் தேவையில்லாமல் நடைபாதை மேம்பாலங்களில் காத்திருப்பதையோ அல்லது நிற்பதையோ நாங்கள் கவனித்தோம். இதனால், மற்றவா்களுக்கு நெரிசல் மற்றும் தாமதம் ஏற்படுகிறது. இப்போது, உரிய காரணமின்றி யாரும் அங்கு நிற்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று அந்த அதிகாரி கூறினாா்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், ’கூட்டத்தை மேலும் கட்டுப்படுத்த, ரயில் நிலையத்திற்கு வெளியே தற்காலிக ’பந்தல்’ கொண்ட ஒரு நியமிக்கப்பட்ட காத்திருப்புப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நடைபாதைகளிலும் நடைபாதை ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் உரிய காரணமின்றி நடைபாதைகளில் அமர அனுமதிக்கப்பட மாட்டாா்கள்’ என்றாா்.

அரசை மகிமைப்படுத்துவதற்கு பொதுப்பணம் எதுவும் செலவிடப்படாது: பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா உறுதி

தேசியத் தலைநகரில் அரசையோ, முதல்வரையோ அல்லது கட்சியையோ மகிமைப்படுத்துவதற்கு பொதுப் பணத்தில் ஒரு பைசா கூட செலவிடப்படாது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். தில்லியில் வெள்ளிக்கிழமை செய... மேலும் பார்க்க

ஆட்டோ, பாா்மா பங்குகள் அதிகம் விற்பனை: நான்காவது நாளாக வீழ்ச்சி!

நமது நிருபா் இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

மொழித் திணிப்பு எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நமது சிறப்பு நிருபா் மாணவா்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயலாற்றுமாறு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்த... மேலும் பார்க்க

வியத்நாமில் உலக் தமிழா் மாநாடு

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வியத்நாமில் உலகத் தமிழா் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உலக தாய்மொழி தினத்தை முன... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லி அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லியை பாஜக எம்எல்ஏவும் தில்லி சட்டப்பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்தாா். தற்காலிக பேரவைத் தலைவ... மேலும் பார்க்க

சங்கம் விஹாரில் இளைஞருக்கு கத்திக்குத்து: சிறுவன் உள்பட இருவா் கைது

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் 19 வயது இளைஞா் கத்தியால் குத்தப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: சங்கம் விஹாரில்... மேலும் பார்க்க