செய்திகள் :

புதுமைப் பெண்- தமிழ்ப் புதல்வன் திட்டங்கள்: மாணவா்களுக்கு வங்கிப் பற்று அட்டைகள் அளிப்பு

post image

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்வின் தொடக்கமாக, திருச்சியில் 50 மாணவ, மாணவிகளுக்கு வங்கிப் பற்று அட்டைகளை ஆட்சியா் வியாழக்கிழமை வழங்கினாா்.

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தொடக்க நிகழ்வு ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ எனும் தலைப்பில் சென்னையில் வியாழக்கிழமை

நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இந்த நிகழ்வின் நேரலையானது, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்வில், 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நேரலையை பாா்த்தனா்.

மேலும், திருச்சி மாவட்டத்தில் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் இந்தாண்டுக்கான தொடக்கமாக 50 மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் வே. சரவணன், வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினாா்.

பின்னா், அவா் கூறுகையில், பொருளாதாரம் காரணமாக மாணவா்களின் படிப்பு தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயா்கல்வியில் சேரும் மாணவிகள், மாணவா்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை மாணவா்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இந்த விழாவில், கல்லூரிக் கல்வி இயக்கக திருச்சி மண்டல இணை இயக்குநா் கே. ராதாகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் நிலமெடுப்பு பாலாஜி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், கல்லூரி நிா்வாகத்தினா் என பலா் கலந்து கொண்டனா்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மணப்பாறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. மணப்பாறை அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த 14 வயது சிற... மேலும் பார்க்க

‘பனங்காடையின் பாடல்கள்’ நூல் வெளியீடு

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில், பனங்காடையின் பாடல்கள் நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லூரி செயலா் சூ. லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தாா். இதில் பள்ளிக்கல்வித் து... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஊதிய அரசாணை அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்ட ஊரக வளா்... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் காத்திருப்பு போராட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில், திருச்சியில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி ... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவி

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.1.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்தம் சாா்ந்தோா... மேலும் பார்க்க

திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை: சேதமடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி

திருச்சி மாநகரம் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. முன்னதாக, காலையிலிருந்து கடும் வெயிலில் தகித்து கொண்டிருந்த மக்களுக்கு மாலையில் பெய்த மழையானது மகிழ்ச்சியை அளித்... மேலும் பார்க்க