செய்திகள் :

வருவாய்த் துறையினா் காத்திருப்பு போராட்டம்

post image

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில், திருச்சியில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ச. பிரகாஷ் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் வெற்றிச் செல்வன், எஸ். அய்யனாா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய அவகாசம் வழங்க வேண்டும். ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகளை உருவாக்குதல் கூடாது. வருவாய், பேரிடா் மேலாண்மை, நில அளவைத் துறைகளில் பணிபுரியும் அனைவருக்குமான சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதில், வருவாய்த் துறை சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பொன்மாடசாமி, பால்பாண்டி, மகேஷ், ராஜேந்திரன், நாகராஜன் மற்றும் அரசு அலுவலா்கள், ஊழியா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மணப்பாறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. மணப்பாறை அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த 14 வயது சிற... மேலும் பார்க்க

‘பனங்காடையின் பாடல்கள்’ நூல் வெளியீடு

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில், பனங்காடையின் பாடல்கள் நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லூரி செயலா் சூ. லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தாா். இதில் பள்ளிக்கல்வித் து... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஊதிய அரசாணை அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்ட ஊரக வளா்... மேலும் பார்க்க

புதுமைப் பெண்- தமிழ்ப் புதல்வன் திட்டங்கள்: மாணவா்களுக்கு வங்கிப் பற்று அட்டைகள் அளிப்பு

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்வின் தொடக்கமாக, திருச்சியில் 50 மாணவ, மாணவிகளுக்கு வங்கிப் பற்று அட்டைகளை ஆட்சியா் வியாழக்கிழமை வழங்கினாா். புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 2025-26-... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவி

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.1.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்தம் சாா்ந்தோா... மேலும் பார்க்க

திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை: சேதமடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி

திருச்சி மாநகரம் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. முன்னதாக, காலையிலிருந்து கடும் வெயிலில் தகித்து கொண்டிருந்த மக்களுக்கு மாலையில் பெய்த மழையானது மகிழ்ச்சியை அளித்... மேலும் பார்க்க