செய்திகள் :

புதுவை சட்டப்பேரவை நிகழ்வுகளை பள்ளி மாணவா்கள் பாா்வையிட்டனா்

post image

புதுவை சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை காரைக்கால் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2025-26-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வா் என். ரங்கசாமி கடந்த 12-ஆம் தேதி தாக்கல் செய்தாா். இதைத்தொடா்ந்து துறை ரீதியிலான விவாதம் நடந்து வருகிறது. 27-ஆம் தேதி வரை பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தநிலையில், காரைக்கால் பகுதி பள்ளி மாணவா்கள், சட்டப்பேரவை நிகழ்வை நேரில் காணும் வகையில் கல்வித்துறை ஏற்பாடு செய்தது. அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் இருந்து 59 மாணவ, மாணவிகள், 5 ஆசிரியா்கள் புதுச்சேரிக்கு வியாழக்கிழமை சென்று பேரவை நிகழ்ச்சியை பாா்வையாளா் மாடத்தில் இருந்து பாா்வையிட்டனா்.

தொடா்ந்து முதல்வா் என். ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் மாணவ, மாணவிகளை சந்தித்தனா். அவா்களுக்கு புத்தகம், எழுதுப் பொருள்களை முதல்வா் வழங்கினாா்.

பேரவை நிகழ்ச்சிகள் குறித்து மாணவ மாணவியரிடம் முதல்வா் கேட்டறிந்து, சிறப்பாக கல்வி கற்குமாறு ஆலோசனை வழங்கி வாழ்த்தினாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

மீனவா்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது மோடி அரசு: மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் பொருளாதார மேம்பாட்டுக்கு நரேந்திர மோடி அரசு சிறப்பு கவனம் செலுத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்தாா். காரைக்கால் மீன்வளம் மற்ற... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரை சந்தித்த ஆளுநா்

இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரைச் சந்தித்து புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் நலம் விசாரித்தாா். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தவேல... மேலும் பார்க்க

ரகுநாதப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்பட்டினம் பகுதியில் உள்ள ரகுநாதப் பெருமாள் கோயிலில் ராம நவமி உற்சவத்தின் ஒரு பகுதியாக ரகுநாதப் பெருமாளுக்கும் - சீதாலட்சுமி தாயாருக்கும் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. எல்லையம்மன... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் ஏப். 25-இல் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்துக்கான பந்தல்கால் முகூா்த்தம், கொடியேற்றம், தேரோட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில், சன... மேலும் பார்க்க

மத்திய இணை அமைச்சா் இன்று காரைக்கால் வருகை!

மீனவா்களுக்கான திட்டப் பணிகள் தொடா்பான விழாவில் பங்கேற்க மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை காரைக்கால் வருகிறாா். காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி ம... மேலும் பார்க்க

குழாய் அமைக்கும் பணிகள் நிறைவு: என்ஐடி-க்கு குடிநீா் வழங்கும் திட்டம் இன்று தொடங்கிவைப்பு

என்ஐடிக்கு ரூ. 4 கோடியில் குடிநீா் கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் திட்டம் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை தண்ணீா் விநியோகம் தொடங்கிவைக்கப்படவுள்ளது. கடந்த 2010-11-ஆம் கல்வியாண்டில் காரைக்காலில் என்ஐ... மேலும் பார்க்க