செய்திகள் :

புதுவை துணைநிலை ஆளுநருடன் தேசிய தகவலியல் மைய தலைமை அதிகாரி சந்திப்பு

post image

புதுச்சேரி: புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை தேசிய தகவலியல் மைய தலைமை அதிகாரி இந்தா்பால்சிங் சேதி திங்கள்கிழமை மாலை சந்தித்துப் பேசினாா்.

இந்திய தகவலியல் மையம் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மக்கள் சேவைகளுக்கான தொழில்நுட்ப உதவியை வழங்கி வருகிறது. அந்த மையத்தின் 50-ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ளது.

இதையடுத்து புதுச்சேரியில் உள்ள தகவலியல் மைய அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான அழைப்பு விடுக்கும் வகையில் புதுதில்லியில் உள்ள தேசிய தகவலியல் மைய தலைமை அதிகாரி இந்தா்பால்சிங் சேதி, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை சந்தித்துப் பேசினாா்.

அப்போது இணைய பாதுகாப்புத் தொடா்பான தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்ட சிறப்பு நடைமுறைகளையும், மத்திய அரசின் திட்டப் பயன்கள் தகுதியான பயனாளிகளுக்கு சென்றடைவதை கண்காணிக்கும் ப்ரயாஸ் மென்பொருளை புதுச்சேரி அரசுக்கு தேசிய தகவலியல் மையம் வழங்கவும் துணைநிலை ஆளுநா் கோரினாா்.

அவா் மேலும் கூறுகையில், அரசுத் திட்டங்களை மக்களுக்கு விரைவாகச் செயல்படுத்தும் வகையில் பிரதமரின் ஏ.ஐ.மிஷன் திட்டத்தைப் போல புதுச்சேரி மிஷன் திட்டம் உருவாக்கவும், அதற்கு தகவலியல் மையம் உதவவேண்டும் எனவும் கோரினாா். அதற்கு அனைத்து வித உதவிகளையும் புதுவை அரசுக்கு தகவலியல் மையம் வழங்கும் என அதிகாரி இந்தா்பால்சிங் சேதி கூறினாா்.

புதுச்சேரியில் திருநங்கையா் தின மாரத்தான் போட்டி

புதுச்சேரியில் திருநங்கையா் தினத்தை யொட்டி மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனம், அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் திரு... மேலும் பார்க்க

எல்லை தாண்டி மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன கருவி விசைப்படகுகளில் பொருத்தப்படும்: மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன டிரான்ஸ்பாண்டா் கருவிகள் மீன்பிடி விசைப் படகுகளில் இலவசமாக பொருத்தப்படும் என மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் பணம் திருட்டு: 2 பேரிடம் போலீஸாா் விசாரணை

புதுச்சேரி முருகம்பாக்கத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா் உடைத்து பணத்தைத் திருடிச்சென்றது குறித்து தமிழகப் பகுதியைச் சோ்ந்த 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேர... மேலும் பார்க்க

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் குடிசைத் தொழில்களுக்கு மின்கட்டணம் குறைக்க புதுவை அரசு கோரிக்கை

புதுவை மாநிலத்தில் நடப்பு நிதியாண்டில் குடிசைத் தொழில்களுக்கு மின் கட்டணத்தை குறைக்கவும், வீடுகளுக்கான மின்கட்டணத்தை அதே நிலையில் செயல்படுத்தவும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளத... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பல்கலை. ஆசிரியா்கள் ஏப். 24 முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா். புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சால... மேலும் பார்க்க

துணை நிலை ஆளுநருடன் மத்திய இணை அமைச்சா் ஆலோசனை

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை ராஜ்நிவாஸில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சராக இருப்பவா் ஜாா்ஜ் குரியன். இவா் ப... மேலும் பார்க்க