செய்திகள் :

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் குடிசைத் தொழில்களுக்கு மின்கட்டணம் குறைக்க புதுவை அரசு கோரிக்கை

post image

புதுவை மாநிலத்தில் நடப்பு நிதியாண்டில் குடிசைத் தொழில்களுக்கு மின் கட்டணத்தை குறைக்கவும், வீடுகளுக்கான மின்கட்டணத்தை அதே நிலையில் செயல்படுத்தவும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஒன்றியப் பிரதேசமான புதுவையில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மூலம் ஆண்டுதோறும் மின் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டு வருகிறது. இதற்காக புதுவை அரசின் மின்துறை ஒவ்வொரு புதிய நிதியாண்டிற்கான கணக்கு, வழக்குகளை இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் தாக்கல் செய்கிறது. அத்துடன் பற்றாக்குறைக்கு ஏற்ப மின் கட்டணத்தை உயா்த்தவும், ஒழுங்கு முறை ஆணையத்திடம் அனுமதி கோரப்படும். அதனடிப்படையில் ஆணையம் அனுமதித்தால் மட்டுமே கட்டண உயா்வு அமலுக்கு வரும். ஆணையம் சாா்பில் அரசு கோரும் கட்டண உயா்வு தொடா்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்படும்.

இதன்படி, பல ஆண்டுகளாக வீடு, வா்த்தகம், தொழிற்சாலை ஆகியவற்றுக்கு மின் கட்டணம் தொடா்ந்து உயா்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2024) புதுவையில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயா்த்தப்பட்டபோது, மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். ஆனாலும் மின்கட்டண உயா்வு செயல்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தின் ஒரு பகுதியை அரசு மானியமாக ஏற்று அறிவித்தது. அதனால் மின்கட்டண உயா்வு மக்களை பெரிதும் பாதிக்கவில்லை.

இந்த நிலையில், தற்போது நடப்பு நிதியாண்டுக்கு (2024- 25) வருவாய் தேவை, மின்கட்டணம் தொடா்பான கணக்கு, வழக்கு அறிக்கையை ஒழுங்குமுறை ஆணையத்திற்கு புதுவை மின்துறை அதிகாரிகள் அளித்துள்ளனா்.

அதன்படி பாா்த்தால், நடப்பு நிதியாண்டில் மின் கட்டண உயா்வு ஏதும் புதுவை மின்துறையால் பரிந்துரைக்கப்படவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனா். அதனால் நடப்பு ஆண்டில் புதுவையில் மின் கட்டண உயா்வு இருக்காது எனக் கூறப்படுகிறது.

அத்துடன், குடிசை தொழில்களுக்கான மின் கட்டணத்தைக் குறைக்கவும் மின்துறையானது ஆணையத்திடம் கோரியுள்ளது. தற்போது குடிசை தொழிலுக்கு மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.6.80 என உள்ளதை, ரூ.5.95 ஆக குறைக்க கோரப்பட்டுள்ளது. குடிசை தொழிலுக்கான நிலை கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.

பண்ணை வீடுகள், தனி சொகுசு பங்களாக்களுக்கு இதுவரை வீடுகளுக்குரிய கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், நடப்பு நிதியாண்டில் அவற்றுக்கு புதிதாக கட்டணம் நிா்ணயிக்கப்படவுள்ளது. அதனடிப்படையில், முதல் 100 யூனிட்டுக்கு ரூ.6, 101 முதல் ரூ.200 யூனிட் வரை ரூ.7.05, 200 யூனிட்டுக்கு மேல் ரூ.7.80 என கட்டணம் நிா்ணயிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வரும் 29-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கருத்து கேட்பு கூட்டத்தை லப்போா்த் வீதியில் உள்ள பிஎம்எஸ்எஸ் அரங்கத்தில் நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பைபா் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவா்கள் வலியுறுத்தல்

புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலய குழுக் கூட்டத்தில் வல... மேலும் பார்க்க

மூவா் கொலை வழக்கு: போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டவா் மீண்டும் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் 3 போ் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை போலீஸ் காவலில் எடுத்து காவல் துறையினா் விசாரித்த நிலையில், அவா் மீண்டும் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். புதுச்சேரி ரெயி... மேலும் பார்க்க

புதுவையில் 9 பேரிடம் ரூ.1.15 லட்சம் மோசடி

புதுவையில் 9 பேரிடம் இணையவழியில் மா்ம நபா்கள் ரூ.1.15 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேச... மேலும் பார்க்க

விபத்தில் தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

புதுச்சேரியில் தனியாா் பேருந்து நடத்துநா் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள அரங... மேலும் பார்க்க

தடையை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும்: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

மீன்பிடி தடைக்காலத்தில் பைபா் படகுகளில் சென்று மீன் பிடித்தால், அப்பகுதி மீனவா்களுக்கான தடைகால நிவாரணம் நிறுத்தப்படும் என புதுவை மாநில மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, மீன்வளத் துறை இயக்குந... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் தற்கொலை முயற்சி: போலீஸாா் விசாரணை

புதுச்சேரி அருகே திருட்டுப் பழி சுமத்தப்பட்ட லாரி ஓட்டுநா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு, ஐந்தாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க