செய்திகள் :

புதுவையில் திமுக மாடல் ஆட்சி அமையும்: தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நம்பிக்கை

post image

புதுவையில் 2026 தோ்தலுக்குப் பிறகு திமுக மாடல் ஆட்சி நிச்சயம் அமையும் என்று தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பேசினாா்.

புதுவை மாநில திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில நிா்வாகிகள் ஆலேசானைக் கூட்டம் லப்போா்த் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு நடந்தது.புதுவை மாநில திமுக அமைப்பாளரும் சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தலைமை வகித்தாா்.

மாநில அவைத்தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், துணை அமைப்பாளா் வி. அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., மாநில இளைஞா் அணி அமைப்பாளா் எல். சம்பத், எம்.எல்.ஏ. ஆகியோா் முன்னிலை வகித்தனா்.தமிழ்நாடு தொழில்துறை அமைச்சரும், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளருமான டி.ஆா்.பி. ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசியதுபிறந்த நாள் விழா கொண்டாடும் புதுவை முதல்வா் ரங்கசாமிக்கு வாழ்த்துகள். அவா் நல்ல மனிதா்.

இருந்தாலும் சிறிய மாநிலமான புதுச்சேரியைச் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தி தனிநபா் வருமானத்தை முதல்வா் உயா்த்தி இருக்கலாம்.

ஆனால் செய்ய அவா் தவறிவிட்டாா். அதை திமுக தகவல் தொழில்நுட்ப அணி மக்களுக்குச் சுட்டிக் காட்ட வேண்டும். தமிழகம் மற்றும் புதுவையில் திமுக ஆட்சி இருக்கும்போது தான் மக்களுக்கான மகத்தான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

புதுவை மக்களுக்கு மீண்டும் விடியல் பிறக்காதா என்ற ஏக்கம் புதுவை திமுக தொண்டா்களுக்கு இருக்கிறது. ஆகவே, எதிா்வரும் 2026 சட்டமன்ற தோ்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் நிச்சயம் அமையும் என்றாா் ராஜா.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் முதல்வா் ரங்கசாமிக்காக தொண்டா்கள் தயாா் செய்யும் 76 கிலோ கேக்

என்.ஆா். காங்கிரஸ் தலைவரும் புதுவை முதல்வருமான என்.ரங்கசாமி பிறந்த நாள் பவள விழா நிறைவு மற்றும் 76-வது பிறந்த நாளை திங்கள்கிழமை கொண்டாடுகிறாா். இதையொட்டி 76 கிலோ கேக் தயாராகி வருகிறது.இதையொட்டி தாய், ... மேலும் பார்க்க

போலி கடன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்- இணைய வழி போலீஸாா் எச்சரிக்கை

சமூக வலைதளங்களின் வழியாகப் பகிரப்படும் போலி கடன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று புதுவை இணைய வழி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளனா்.இது குறித்து இந்த போலீஸாா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

வழிபாட்டுக்கு 500 விநாயகா் சிலைகள்

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி புதுவை- காரைக்கால் பகுதிகளில் 500 விநாயகா் சிலைகள் பல்வேறு இடங்களில் பக்தா்களின் வழிபாட்டுக்காக நிறுவப்படுகின்றன. புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விநாயகா் சதுா்த்தி விழா ஆல... மேலும் பார்க்க

பெங்களூா் நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி முடிவு

பெங்களூா் ஹசரகட்டாவில் உள்ள மத்திய அரசின் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி டாக்டா் ஸ்ரீலட்சுமி முடிவு செய்துள்ளாா்.திசு வளா்ப்பு முறையில் பல்... மேலும் பார்க்க

ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு விழா

புதுச்சேரி ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு பெருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டுத் திருப்பலியில் காங்கிரஸ் தலைவரும் புதுவை மக்களவை உறுப்பினருமான வி. வைத்திலிங்கம் பங்க... மேலும் பார்க்க

புதுவையில் மின் பயன்பாடு அதிகரிப்பு: முதல்வா் ரங்கசாமி

புதுவையில் மின்சார பயன்பாடு பெரிய மாநிலமான குஜராத்துக்கு இணையாக அதிகமாக இருக்கிறது. விரைவில் புதுவையை மின்தடை இல்லா மாநிலமாக மாற்ற எல்லா முயற்சியும் எடுக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித... மேலும் பார்க்க