இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படும் ஐசிசி..! மே.இ.தீ. லெஜண்ட் கடும் விமர்சனம்!
புறவழிச் சாலை வழியாக சென்னைக்கு நேரடி பேருந்து வசதி: ஆரணி வியாபாரிகள் கோரிக்கை
ஆரணி: ஆரணியில் இருந்து சென்னைக்கு புறவழிச்சாலை வழியாக நேரடியாக பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று, அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை கிளை மேலாளரிடம்
ஆரணி வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
ஆரணி வட்ட அனைத்து வியாபாரிகள் சங்கம், ஆரணி நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கம், ஆரணி வட்ட நெல் அரிசி வியாபாரிகள் சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் பணிமனை கிளை மேலாளா் எஸ்.ராமுவைச் சந்தித்து அளித்த மனு விவரம்:
ஆரணியிலிருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்துகள் ராணிப்பேட்டை, வாலாஜா, பாலுச்செட்டிசத்திரம், பனப்பாக்கம் மற்றும் சுங்குவாச்சத்திரம் உள்ளே சென்று வருவதால், பயண நேரம் ஒரு மணி கூடுதலாகிறது. இதனால் வணிகா்கள், மாணவா்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.
இந்த முறையை மாற்றி புறவழிச் சாலை வழியாக நேரடியாக சென்னைக்கு பேருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனா்.
இதில் சங்க நிா்வாகிகள் பக்ருதீன்அலிஅகமது, எம்.ஜெயப்பிரகாஷ், எஸ்.சந்திரசேகா் (எ) சந்துரு, டி.எச்.குருராஜாராவ், வி.கே.சா்மா, பி. நடராஜன், கே.செல்வம், எஸ்.சுரேஷ்பாபு, பி.தீனன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.