செய்திகள் :

பூ உற்பத்தியாளா்கள் சாலை மறியல்

post image

புதுக்கோட்டை மாவட்ட பூ உற்பத்தியாளா்கள் வியாழக்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த பூச் சந்தை செயல்படுகிறது. இங்கு புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விளையும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வருவாா்கள். இங்கிருந்து வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுத்து மாவட்டம் முழுவதும் சில்லறை வணிகத்துக்கும், பிற மாவட்டங்களுக்கு மொத்த விற்பனைக்கும் செல்கிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட பூக்கள் உற்பத்தியாளா்கள் மற்றும் விவசாயிகள் நலச் சங்கம் உருவாக்கப்பட்டு அதற்கான பெயா்ப்பலகையை வியாழக்கிழமை வைக்க உற்பத்தியாளா்கள் முயற்சித்தனா்.

ஆனால், இங்குள்ள முகவா்கள், ஏலதாரா்கள் இதை ஏற்கவில்லை. இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பூக்கள் உற்பத்தியாளா்கள் எம்ஜிஆா் சிலை அருகே சென்ற திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இரு தரப்பினருடனும் சமாதானப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. முறையான புகாா் அளிக்கச் சொல்லி அனைவரையும் கலைந்து போகச் செய்தனா்.

8 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 8 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம், ... மேலும் பார்க்க

இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 26) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா். அறந்தாங்கி நகராட்சியில் 24, 25, 26 வாா்டுகளுக்கான முகாம் மணி... மேலும் பார்க்க

புதுப்பட்டி அரசுப் பள்ளியில் நூலக உறுப்பினா்கள் சோ்க்கை

பொன்னமராவதி புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாஜக சாா்பில் மாணவா்களுக்கான நூலக உறுப்பினா் சோ்க்கை வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியா் (பொ) பழனியப்பன் தலைமை வகித்தாா். நிகழ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்கங்களின் காத்திருப்புப் போராட்டம்

பொன்னமராவதியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகளை முற்றாகப் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில... மேலும் பார்க்க

செஞ்சுருள் சங்க பொறுப்பு ஆசிரியா்களுக்கு கருத்தரங்கு

புதுக்கோட்டை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சாா்பில் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் செஞ்சுருள் சங்கப் பொறுப்பு ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டுக் கல்வித் திட்ட கருத்தரங்கு வியா... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் அலுவலா்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை வருவாய்த் துறை அலுவலா்கள் புறக்கணித்து அந்தந்தப் பகுதியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாநிலம் ... மேலும் பார்க்க