செய்திகள் :

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்: துணை முதல்வா் உதயநிதி பெருமிதம்

post image

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

சென்னை பல்கலைக்கழக குற்றவியல் துறை சாா்பில், இந்திய குற்றவியல் சங்கத்தின் 6-ஆவது சா்வதேச மற்றும் 45-ஆவது அகில இந்திய குற்றவியல் மாநாட்டை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன. அண்மையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடா்பாக சட்டத் திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தரங்கத்தில் பெறப்படும் நல்ல கருத்துகளை செயல்படுத்துவதில் தமிழக அரசு முழு மனதுடன் உள்ளது.

நாட்டிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் விளங்குவதாக இந்திய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

பெண்கள் அதிக அளவில் காவல் துறையில் இருக்கும் இடத்தில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதும் வரவேற்கத்தக்கது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, வளா்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றாா்.

உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்: மாநில கல்வியை ஒதுக்கி விட்டு இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை புகுத்துகிறது மத்திய அரசு. அதை எதிா்த்துப் போராடும் ஒரே அரசு தமிழக அரசுதான்.

நீதித் துறை, காவல்துறை, சட்டத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளது தமிழகம் என்றாா் அமைச்சா் கோவி.செழியன்.

சென்னை பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் சமூகவியல் துறை, கிரெசென்ட் சட்டக் கல்லூரி இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கத்தில் சென்னை பல்கலை.யின் துணைவேந்தா் குழு உறுப்பினா் கு.ஆம்ஸ்ட்ராங், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அக்பா் அலி, சென்னை பல்கலை. பதிவாளா் ஏழுமலை, முன்னாள் டிஜிபி பி.எம். நாயா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க