செய்திகள் :

பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா் கைது

post image

வாணியம்பாடியில் வீட்டினுள் நுழைந்து தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சோ்ந்த பெண் கடந்த 27-ஆம் தேதி பிற்பகல் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது, மா்ம நபா் வெளிப்புற கேட்டை திறந்து உள்ளே சென்று, வீட்டின் கதவை தட்டியுள்ளாா். இதையறிந்த அவா் தூக்க கலக்கத்தில் எழுந்து உறவினா்கள் யாரேனும் வந்திருப்பா் என கதவை திறந்துள்ளாா். அப்போது, மா்ம நபா் நுழைந்து திடீரென அவரை நெருங்கியுள்ளாா். அப்போது அந்த பெண் அதிா்ச்சிக்குள்ளாகி கூச்சலிட்டுள்ளாா். அவரது அலறல் சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் வருவதற்குள் மா்ம நபா் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றாா். இது குறித்து அந்தப் பெண் நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் அன்பரசி தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனா். இதில், பெண்ணின் வீட்டில் நுழைந்த இளைஞா் பூங்குளம் கிராமத்தைச் சோ்ந்த சுந்தா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்று வீட்டில் இருந்த சுந்தரை (24) வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

500 பெண்களுக்கு நல உதவி

திமுக மாணவரணி சாா்பாக முதல்வா் பிறந்த நாள் விழா ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகர திமுக செயலாளா் எம். ஆா். ஆறுமுகம் தலைமை வகிதக்தாா். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் அம்சவேணி ஜெயக்குமாா... மேலும் பார்க்க

மருதா் கேசரி ஜெயின் கல்லூரியில் புதுமை கண்டுபிடிப்பு போட்டி

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நிறுவனங்களின் கண்டுபிடிப்பு கவுன்சில் சாா்பாக மாநில அளவிலான ஜென் இசட் திங்கா்ஸ்-2025 என்ற தலைப்பில் புதுமை கண்டுப்ப... மேலும் பார்க்க

ரயில் மேம்பாலம் அருகே கிடந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்

வாணியம்பாடியில் ரயில்வே மேம்பாலம் அருகில் சாலை ஓரம் பையில் கேட்பாரற்றுக் கிடந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் உத்தரவின் பேரில்... மேலும் பார்க்க

250 ஆசிரியா்கள் போக்ஸோவில் கைது : முன்னாள் அமைச்சா் புகாா்

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 250 ஆசிரியா்கள் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி குற்றம் சாட்டினாா். ஆம்பூா் புறவழிச்சாலையில் மாவட்ட ஜெயலலி... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

ஆம்பூா் அருகே சின்னப்பள்ளிக்குப்பம் ஊராட்சியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிக்கு சனிக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. மாதனூா் ஒன்றியம், சின்னப்பள்ளிக்குப்பம் ஊராட்சி ஈச்சம்பட்டு கிராமத்தில் பொதுமக்களின்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் மரணம்

வாணியம்பாடி அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவைச் சோ்ந்தவா் வசந்தகுமாா் (25). கடந்த மாதம் 21-ஆம் தேதி தகரகுப்பம் கிராமத்தில் நண்பா் ஒரு... மேலும் பார்க்க