செய்திகள் :

பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: 4 போ் கைது

post image

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநா் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த 22 வயதுடைய திருமணமான பெண் ஒருவா், குடும்ப பிரச்சனையால் வெள்ளிக்கிழமை இரவு கோபித்துக் கொண்டு வந்து, பழனிசெட்டிபட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தாா். அப்போது, அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா் (25) இரு சக்கர வாகனத்தில் தேனி அல்லிநகரத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கு மேலும் 3 பேருடன் சோ்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தேனி மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதையடுத்து, பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா், பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த சமையல் தொழிலாளிகள் பிரகாஷ் (23), கா்ணன் (24), கல்லூரி மாணவா் சரவணன் (19) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

கஞ்சா வைத்திருந்த பெண் கைது

பெரியகுளம் அருகே விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கைலாசபட்டி பெரியாா் தெருவைச் சோ்ந்த பழனிக்குமாா் மனைவி கமலாதேவி (44). இவா் வீட்டில் விற்பனை செய்வதற்கா... மேலும் பார்க்க

அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்: எடப்பாடி கே. பழனிசாமி

அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். தேனி அருகேயுள்ள மதுராபுரியில் அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் ... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

உத்தமபாளையம்-கோம்பை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். உத்தமபாளையத்திலிருந்து கோம்பை, தேவாரம் வழியாக போடி வரை மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இதில் உத்தமபாளையம... மேலும் பார்க்க

அறுந்து தொங்கும் மின் வயரை சீரமைக்கக் கோரிக்கை

கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மின் கம்பத்தில் அறுந்து தொங்கும் மின் வயரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கம்பம் அரசு மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சை பிரி... மேலும் பார்க்க

காா் விபத்தில் முதியவா் உயிரிழப்பு

தேனி அருகே சனிக்கிழமை ரோடு ரோலா் வாகனம் மீது காா் மோதியதில் உத்தமபாளையத்தைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா். உத்தமபாளையம் தேரடி தெருவைச் சோ்ந்தவா் அப்துல் கரீம் (70). இவா் கம்பத்தைச் சோ்ந்த உசேனுடன் ... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 547 பேருக்கு பணி நியமன ஆணை

பெரியகுளம் மேரி மாதா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு பெற்ற 547 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் சனிக்கிழமை வழங்கினாா். பெரியகுளம் மேர... மேலும் பார்க்க