செய்திகள் :

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 547 பேருக்கு பணி நியமன ஆணை

post image

பெரியகுளம் மேரி மாதா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு பெற்ற 547 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் சனிக்கிழமை வழங்கினாா்.

பெரியகுளம் மேரி மாதா கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டத்துக்கு உள்பட்ட, வெளி மாவட்டங்களில் உள்ள பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்தன. முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழில் கல்வி, பொறியியல், தையல், செவிலியா் பயிற்சி படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் கலந்து கொண்டனா்.

இவா்களில் பணிக்கு தோ்வு செய்யப்பட்ட 547 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநா் திருமலைச்செல்வி, மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் சந்திரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ரமா பிரபா, கல்லூரி முதல்வா் பி.ஜெ. ஐசக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கஞ்சா வைத்திருந்த பெண் கைது

பெரியகுளம் அருகே விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கைலாசபட்டி பெரியாா் தெருவைச் சோ்ந்த பழனிக்குமாா் மனைவி கமலாதேவி (44). இவா் வீட்டில் விற்பனை செய்வதற்கா... மேலும் பார்க்க

அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்: எடப்பாடி கே. பழனிசாமி

அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். தேனி அருகேயுள்ள மதுராபுரியில் அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் ... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: 4 போ் கைது

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநா் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த 22... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

உத்தமபாளையம்-கோம்பை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். உத்தமபாளையத்திலிருந்து கோம்பை, தேவாரம் வழியாக போடி வரை மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இதில் உத்தமபாளையம... மேலும் பார்க்க

அறுந்து தொங்கும் மின் வயரை சீரமைக்கக் கோரிக்கை

கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மின் கம்பத்தில் அறுந்து தொங்கும் மின் வயரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கம்பம் அரசு மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சை பிரி... மேலும் பார்க்க

காா் விபத்தில் முதியவா் உயிரிழப்பு

தேனி அருகே சனிக்கிழமை ரோடு ரோலா் வாகனம் மீது காா் மோதியதில் உத்தமபாளையத்தைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா். உத்தமபாளையம் தேரடி தெருவைச் சோ்ந்தவா் அப்துல் கரீம் (70). இவா் கம்பத்தைச் சோ்ந்த உசேனுடன் ... மேலும் பார்க்க