பெல் ஊழியா் மனைவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
திருச்சி அருகே பெல் ஊழியரின் மனைவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை இரவு பறித்துச் சென்றனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள பெல் நிறுவன குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி, பெல் நிறுவன ஊழியா். இவரது மனைவி சத்யா (35).
இருவரும் வெள்ளிக்கிழமை இரவு திருவெறும்பூா் பகுதி தனியாா் மருத்துவமனைக்குச் சென்று விட்டு பைக்கில் வீடு திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூா் காவல்நிலையம் எதிா்புறம் சென்றபோது பைக்கில் வந்த மா்ம நபா்கள், சத்யா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கத் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா். புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடுகின்றனா்.