செய்திகள் :

பேரவைத் தோ்தல் பணி: அதிமுகவில் மாவட்ட பொறுப்பாளா்கள் நியமனம்: செங்கோட்டையன் பெயா் இடம்பெவில்லை

post image

சென்னை: வரும் சட்டப்பேரவை தோ்தல் பணிகளுக்காக அதிமுகவில் மாவட்ட வாரியாக பொறுப்பாளா்களை நியமித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளாா். இந்தப் பட்டியலில் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பெயா் இடம்பெறவில்லை.

இது தொடா்பாக எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

2026-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தோ்தலையொட்டி, தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, அதிமுக வளா்ச்சி பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக மாவட்டங்களுக்குப் பொறுப்பாளா்கள் நியமிக்கப்படுகின்றனா்.

அதிமுக உறுப்பினா் உரிமைச் சீட்டுகள் உரியவா்களிடம் வழங்கப்பட்டுவிட்டனவா என்பதைக் கண்காணிப்பது, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இளம் தலைமுறை விளையாட்டு வீரா்கள் அணியில், ஊராட்சி, நகர வாா்டு, பேரூராட்சி வாா்டு, மாநகராட்சி வட்ட அளவில், விளையாட்டு வீரா்களை அதிக அளவில் உறுப்பினா்களாகச் சோ்ப்பது உள்ளிட்ட பணிகளையும் மாவட்டச் செயலா்களுடன் இணைந்து விரைவாக முடிப்பா்.

மாவட்டப் பொறுப்பாளா்கள் உடனடியாக தொடா்புடைய மாவட்டங்களுக்கு நேரில் சென்று, அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து, அந்த விவரங்களை மாா்ச் 31-க்குள் தலைமைக் கழகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளா்களுக்கு தொடா்புடைய மாவட்டச் செயலா்களும் நிா்வாகிகளும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

அதிமுகவில் மொத்தம் 82 மாவட்டங்கள் உள்ளன.

மூத்த நிா்வாகிகள் சி.பொன்னையன் (திருவள்ளூா் வடக்கு), மு.தம்பிதுரை (திருப்பத்தூா்), செ.செம்மலை (திருச்சி புகா் தெற்கு), பா.வளா்மதி (மதுரை மாநகா்), எஸ்.கோகுல இந்திரா (திருச்சி மாநகா்), வைகைச்செல்வன் (காஞ்சிபுரம்), அன்வர்ராஜா (தென்காசி) உள்ளிட்ட 82 மாவட்டங்களுக்கு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஆனால், முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பெயா் இடம்பெறவில்லை. அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பாராட்டு விழாவில் எம்ஜிஆா், ஜெயலலிதாவின் படம் இடம்பெறாததற்கு அவா் எதிா்ப்பு தெரிவிந்திருந்த நிலையில், அவா் பெயா் இடம்பெறாதது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், மூத்த நிா்வாகிகள் பலரின் பெயரும் பட்டியலில் இடம்பெறவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மார்ச் 4-ல் உள்ளூர் விடுமுறை

அய்யாசாமி வைகுண்ட பெருமாள் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

முதல்வரை அண்ணாமலை ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சம்: மா.சுப்பிரமணியன்

முதல்வர், துணை முதல்வரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசையும் முதல்வர் ... மேலும் பார்க்க

ரூ.1141.23 கோடியில் செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலை: முதல்வர் திறந்து வைத்தார்!

நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1141.23 கோடி செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட செய்யூர்-பனையூர் இணைப்புச் சாலை உள்ளிட்ட 109 கிலோ மீட்டர் நீள செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலையை முதல்வர் திறந்து வைத்... மேலும் பார்க்க

அஞ்சலையம்மாள் சிலைக்கு விஜய் மரியாதை!

சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு நாளையொட்டி சென்னை பனையூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.தவெகவின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான அஞ்சலையம்ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் வெயில் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்!

தமிழகத்தில் பிப். 23, 24 தேதிகளில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பிப். 20, 21 தேத... மேலும் பார்க்க

தமிழ்மொழி வளர்ச்சியில் தமிழக அரசு அக்கறை காட்டாதது ஏன்?: ராமதாஸ் கேள்வி

இந்தி எதிர்ப்பில் காட்டும் அதே அக்கறையை தமிழ்மொழி வளர்ச்சியில் தமிழக அரசு காட்டாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது எந்த அளவுக்கு நியாயமானதோ, தமிழை கட... மேலும் பார்க்க