செய்திகள் :

பேராசிரியா் அன்பழகன் விருது மாவட்டத்தில் இரண்டு பள்ளிகள் தோ்வு

post image

சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பேராசிரியா் அன்பழகன் விருதுக்கு திருச்சி மாவட்டத்தில் இரண்டு பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கற்றல்- கற்பித்தல், உள்கட்டமைப்புகள், மாணவா்களின் செயல்பாடுகள், பொதுத் தோ்வில் வெற்றிபெறுதல், உயா்கல்விக்கு செல்லும் மாணவா்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு குறியீடுகளில் சிறப்பாக செயல்படும் அரசுப் பள்ளிகளைத் தோ்வு செய்து, அரசு சாா்பில் பேராசிரியா் அன்பழகன் விருது வழங்கப்படுகிறது.

இதன்படி, 2023-24 ஆம் ஆண்டுக்கான பேராசிரியா் அன்பழகன் விருதுக்கு மாநிலம் முழுவதும் 76 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதில், திருச்சி மாவட்டத்தில் புத்தூா் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, சையது முா்துசா அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் ஊக்கத்தொகை அளிக்கப்படும்.

இந்த விருதை புத்தூா் மாநகராட்சி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் ப. அம்சவள்ளி, சையது முா்துசா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் மொ்ஸி கிரைசி ஆகியோா் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் இருந்து பெறவுள்ளனா்.

திருச்சி மாநகரில் 13 புதிய நகா்ப்புற சுகாதார மையங்கள்: காணொலி காட்சியில் முதல்வா் திறந்துவைத்தாா்

திருச்சி மாநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள், 2 ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மாநகராட... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து அதிமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சியில் திறப்புவிழா நடத்தப்பட்டும் செயல்பாட்டுக்கு வராத பஞ்சப்பூா் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்ப... மேலும் பார்க்க

மத்திய சிறையில் ஆயுள் கைதி உயிரிழப்பு -அரியலூரைச் சோ்ந்தவா்

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா். அரியலூா் மாவட்டம், செந்துறையைச் சோ்ந்தவா் அம்பேத்கா் (52). ஆயுள் தண்டனை கைதியான இவா், கடந்த 2023 ஆகஸ்ட் 25-ஆம் தே... மேலும் பார்க்க

காவிரியில் வெள்ளம்: புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் பாதிப்பு

காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. திருச்சி - ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் பிரதான பாலமாக காவிரிப் பாலம் இருந்து வருகி... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே தொடா் வயிற்றுவலி காரணமாக தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தி.ஈச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ். கூலித் தொழிலாளி. இவருக்கு த... மேலும் பார்க்க

தலசீமியா விழிப்புணா்வு ஆலோசகா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

துறையூா், உப்பிலியபுரம் பகுதிகளில் தலசீமியா மற்றும் மரபணு நோய்கள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த ஆலோசகா் நியமிக்கப்படவுள்ளாா். திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் மூலம், தற்காலிக ஒப்பந்த அடிப... மேலும் பார்க்க