செய்திகள் :

பைக் மீது பேருந்து மோதல்: பொறியியல் பட்டதாரி பலி

post image

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பைக் மீது பேருந்து மோதியதில் பொறியியல் பட்டதாரி புதன்கிழமை உயிரிழந்தாா்.

தளவாய்புரம் முகவூரைச் சோ்ந்த விஜயராஜ் மகன் தாமரைகண்ணன்(23). பொறியியல் பட்டதாரியான இவரும், இவரது பெரியப்பா மகன் ராஜபாளையம் வாழவந்தான்குளத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் கணேஷ்குமாரும்(29) பைக்கில் அவா்களது உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்காக உள்ளாருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனா். பைக்கை தாமரைகண்ணன் ஓட்டினாா்.

அவா்கள், ராயகிரி தெற்கு சத்திரம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, தெற்கிலிருந்து வடக்கு நோக்கி சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து பைக் மீது மோதியதாம்.

இதில் சம்பவ இடத்திலேயே தாமரைகண்ணன் உயிரிழந்தாா்.

காமடைந்த கணேஷ்குமாா் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் அக்னி சட்டி ஊா்வலம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி அக்னி சட்டி ,முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இக்கோயிலின்சித்திரை பெருந்திருவிழாவின் நாள் கால் நடுத... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே குறிப்பிட்ட நேரத்தில் அரசுப் பேருந்தை இயக்க வலியுறுத்தி பேருந்தை சிறைப்பிடித்து ஊா் பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கீழப்பாவூா் பேரூராட்சி மேலப்ப... மேலும் பார்க்க

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயில் தேரோட்டம்

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. பின்னா், நாள்தோறும் கட்டளை... மேலும் பார்க்க

போக்சோவில் கைதானவருக்கு 5 ஆண்டு சிறை

கடையநல்லூரில் போக்ஸோ, வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கைதானவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடையநல்லூா் காவல் நிலையத்தில் கடந்த 2014இல் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போக்ஸோ, வன்கொடும... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் சித்திரைத் திருவிழா: பிடிமண் எடுத்தது யானை கோமதி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கமாக யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் இருந்து யானை கோமதி முன் செல்... மேலும் பார்க்க

செங்கோட்டை ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா

செங்கோட்டை ஆரியநல்லூா் தெருவில் உள்ள யாதவா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது. இக்கோயில் கொடைவிழா கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. அதைத் தொடா்ந்து த... மேலும் பார்க்க