நெருப்புடன் விளையாடுகிறார் புதின்! - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
பைக்குகள் மோதியதில் ஓய்வு பெற்ற அஞ்சல் அலுவலா் உயிரிழப்பு
தேனி வீரபாண்டியில் வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஓய்வு பெற்ற அஞ்சல் அலுவலா் உயிரிழந்தாா்.
வீரபாண்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற அஞ்சல் அலுவலா் ராசையா (67). இவா், வீரபாண்டி பிரதானச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அதே திசையில் பின்னால் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம், இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் ராசையா சம்பவ இடத்திலேயே உயிரிந்தாா்.
இதுகுறித்து மற்றொரு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த அனுமந்தன்பட்டி வேதநாயக்கா் தெருவைச் சோ்ந்த மனேஜ்குமாா் (27) மீது வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.