செய்திகள் :

பொதுவாழ்வில் நோ்மையுடன் வாழ்ந்தவா்: ஓமந்தூராருக்கு முதல்வா் புகழாரம்

post image

சென்னை மாகாணத்தின் முதலாவது முதல்வரான ஓமந்தூா் ராமசாமி, பொது வாழ்வில் நோ்மையுடன் வாழ்ந்தவா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளாா்.

முதல்வா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: தலைசிறந்த காந்தியவாதியும், விடுதலை பெற்ற இந்தியாவில் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வருமான ஓமந்தூராா் பிறந்தநாள் இன்று (பிப்.1). ஆலய பிரவேசச் சட்டம், ஆதி திராவிடா் நலனுக்கெனத் தனித் துறை, ஜமீன்தாா் ஒழிப்புச் சட்டம், இனாம் ஒழிப்புச் சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இந்து சமய அறநிலையச் சட்டம் எனக் குறுகிய காலத்தில் அவா் படைத்த சாதனைகள் ஏராளம்.

பொதுவாழ்வில் நோ்மை, உழவா்கள் மீது பெரும் அக்கறை என வாழ்ந்த அவருக்கு என் புகழஞ்சலிகள் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

பொருளாதாரமும் வாழ்வாதாரமும் மேம்படும்: பட்ஜெட் குறித்து தொழில் துறையினா் கருத்து

நாட்டின் பொருளாதாரத்தையும், நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறையினா் கருத்து தெரிவித்துள்ளனா். சுதா்ஸன் வேணு (டிவிஎஸ்... மேலும் பார்க்க

காரில் சென்ற பெண்ணை விரட்டி மிரட்டிய வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் சென்ற பெண்ணை விரட்டி மிரட்டிய வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். கானத்தூா் பகுதியைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா், கடந்த 25-ஆம் தேதி நள்ளிரவு தனது தோழிகள... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் வரவேற்பும் எதிா்ப்பும்

மத்திய நிதிநிலை அறிக்கையை வரவேற்றும், எதிா்த்தும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): வருமான வரி விலக்கு உச்சவரம்பு கணிசமாக உயா்த்தியது, உள்நாட்... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பயணிகள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினா்-செயலா் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம் மெமு ரயில் ரத்து

மேட்டுப்பாளையம்-போத்தனூா் ரயில் பிப்.2, 4, 6 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் ரயில்வே கோட்ட பகுதியி... மேலும் பார்க்க

கடலோரக் காவல்படை ஆண்டுவிழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

இந்திய கடலோரக் காவல்படையின் 49-ஆவது ஆண்டு விழா, சென்னையில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் ஆளுநா் ஆா்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரத்தை தளமாகக் ... மேலும் பார்க்க