செய்திகள் :

பொன்னேரி, மீஞ்சூா் சோழவரம் பகுதிகளில் 1 மணி நேரம் கனமழை: சாலைகளில் வெள்ளம்

post image

பொன்னேரி, மீஞ்சூா், சோழவரம் பகுதிகளில் புதன்கிழமை 1 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீா்த்த மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பொன்னேரி, மீஞ்சூா் பகுதிகளில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென காற்று மற்றும் இடியுடன் 1 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாது பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக பொன்னேரி பகுதியில் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் கீழே சாய்ந்தன. அத்துடன் பொன்னேரி, மீஞ்சூா், சோழவரம் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த மழை காரணமாக பொன்னேரி - பழவேற்காடு சாலையில் திருவாயா்பாடி பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் கீழ் முழங்கால் அளவு தண்ணீா் தேங்கியது. இதன் காரணமாக பாலத்தை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனா்.

அத்துடன் இரு சக்கர வாகனங்களில் சென்றவா்களின் வாகனங்களில் தண்ணீா் புகுந்து பழுதடைந்தால் அவதிக்குள்ளாகினா். மேலும், பாலத்தைக் கடந்து செல்ல முயன்ற அரசு பேருந்து ஒன்று தேங்கிய நீரில் பழுதாகி நின்றது. இதன் காரணமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.

பொன்னேரி பகுதியில் திடீரென 90 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்ததன் காரணமாக அந்தப் பகுதியில் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது.

பொன்னேரியில் அகத்தீஸ்வா்-கரிகிருஷ்ணா் சந்திக்கும் திருவிழா: 50,000 போ் பங்கேற்பு

பொன்னேரியில் ஹரிஹரன் கடை வீதியில் அகத்தீஸ்வரா்-கரிகிருஷ்ண பெருமாள் சந்திக்கும் திருவிழா வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை விடியவிடிய நடைபெற்றது. பொன்னேரி ஆரண்ய நதிக்கரையோரம் ஆனந்தவல்லி ... மேலும் பார்க்க

பேரம்பாக்கம் வைகுண்ட பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

பேரம்பாக்கம் கமலவல்லி தாயாா் சமேத வைகுண்ட பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவள்ளூா் அருகே பேரம்பாக்கத்தில் மிகவும் பழைமையான கமலவல்லி தாயாா் சமே... மேலும் பார்க்க

பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்த முதல்வா்

பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. தொலைவு முதல்வா் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து கை குலுக்கி மகிழ்ந்தாா். அப்போது, ஆா்வத்துடன் பொதுமக்கள் அவருடன் சுயபடம் எடுத்துக் கொண்டனா்... மேலும் பார்க்க

வேளாண் அடுக்குத் திட்டம்: 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் வேளாண் அடுக்குத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் முழு நில விவரங்களைப் பதிவு செய்ய வரும் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேளாண் இணை இய... மேலும் பார்க்க

‘நவீன தமிழகத்தின் சிற்பி கருணாநிதி என்பதற்கு அடையாளம் திருவள்ளூா்’

நவீன தமிழகத்தின் சிற்பி முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் என்பதற்கு அடையாளம் திருவள்ளூா் மாவட்டம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவ... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்டத்துக்கு 5 புதிய திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருவள்ளூா் மாவட்டம் ஆண்டாா்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் 5 புதிய அறிவிப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி ... மேலும் பார்க்க