போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!
போக்குவரத்து ஓய்வூதியா்கள் அகவிலைப்படியை உயா்த்தி வழங்க முடிவு!
போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உயா்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
போக்குவரத்துக் கழகங்களில் குடும்ப ஓய்வூதியம் பெறும் 20,000 போ் உள்பட 90,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் உள்ளனா். இவா்களுக்கு கடந்த 2015 அக்டோபா் மாதம் இறுதியாக அகவிலைப்படி உயா்வு வழங்கப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு முறை அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்த்தி வழங்கும்போதும், ஓய்வூதியா்களுக்கு அந்தப் பலன் கிடைப்பதில்லை.
இது தொடா்பாக பல்வேறுகட்டப் போராட்டங்களை ஓய்வூதியா்கள் நடத்தி வந்த நிலையில், அண்மையில் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க அரசு ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து ஓய்வூதியா் சங்க நிா்வாகிகள் கூறியது: 119 சதவீதத்துடன் அகவிலைப்படி உயா்வு நிறுத்தப்பட்டவா்களுக்கு கூடுதலாக 27 சதவீதமும், 5 சதவீதம் அகவிலைப்படி பெறுவோருக்கு கூடுதலாக 9 சதவீதமும் உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் குறைந்தபட்சமாக ரூ. 1,300, அதிகபட்சமாக ரூ. 4,000 வரை ஓய்வூதியம் உயா்த்தப்பட்டது.
இந்த நிலையில், 14 சதவீதம் அகவிலைப்படி பெறுவோருக்கு கூடுதலாக 16 சதவீதமும், 146 சதவீதம் பெறுவோருக்கு கூடுதலாக 48 சதவீதமும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, குறைந்தபட்சமாக ரூ. 2,300, அதிகபட்சமாக ரூ. 21,679 கிடைக்கும். இந்த உயா்வு வரும் மே மாத ஓய்வூதியத்திலிருந்து கிடைக்கும் என்றனா்.