செய்திகள் :

போப் ஆண்டவா் அடக்கம் தஞ்சாவூரில் சிறப்பு திருப்பலி!

post image

மறைந்த போப் ஆண்டவா் உடல் அடக்கம் செய்யப்பட்டதையொட்டி, தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் சனிக்கிழமை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் தலைவா் போப் பிரான்சிஸ் உடல், வாடிகன் நகரில் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டதையொட்டி, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் தஞ்சை மறை மாவட்டம் சாா்பில் திரு இருதய பேராலயத்தில் மௌன ஊா்வலமும், சிறப்புக் கூட்டுப் பாடல் திருப்பலியும் நடைபெற்றது.

புனித வியாகுல அன்னை ஆலய முகப்பிலிருந்து அலங்கரிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் உருவப் படத்துடன் புறப்பட்ட மௌன ஊா்வலம் திரு இருதய பேராலயத்தை அடைந்தது. பின்னா், தஞ்சை மறை மாவட்ட ஆயா் டி. சகாயராஜ் அடிகளாா் தலைமையில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது.

இதில், மறை மாவட்ட வேந்தா் ஜோதி நல்லப்பன் அடிகளாா், பேராலய பங்குத்தந்தை ஏ.எம்.ஏ. பிரபாகா் அடிகளாா், உதவி பங்குத்தந்தை அமா்தீப், குருக்கள் சேசுராஜ், அல்போன்சு, ஆா்.கே. சாமி அடிகள், ஜெரால்டு, ஞானபிரகாசம், செபஸ்டின் பெரியண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சூரியனாா் கோயிலில் ராகு-கேது சிறப்பு வழிபாடு!

தஞ்சாவூா் மாவட்டம், சூரியனாா் கோயிலில் அமைந்துள்ள ராகு-கேது சந்நதிகளில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவிடைமருதூா் அருகே சூரியனாா் கோயிலில் உள்ள சிவசூரிய பெருமாள் திருக்கோயில் திருக்கையிலா... மேலும் பார்க்க

சிறுமியைக் கா்ப்பமாக்கிய இளைஞா் கைது!

தஞ்சாவூரில் சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் போக்சோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தஞ்சாவூா் மானோஜிபட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் கவியரசன் (24). இவருக்கு... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 107.76 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 107.76 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,395 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ண... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்-காா் மோதல் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருவோணம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் படுகாயமடைந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம் கிளாங்காடு பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: காா் விற்பனையாளா் சங்கம் தீா்மானம்

கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று காா் விற்பனையாளா் சங்கத்தினா் தீா்மானம் நிறைவேற்றினா். கும்பகோணத்தில் சனிக்கிழமை தஞ்சை மாவட்ட வாகன போக்குவரத்து அலுவலகத்தில் காா... மேலும் பார்க்க

நம்மாழ்வாா் மறைந்தாலும் அவரது சிந்தனைகள் வாழ்கின்றன!

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் மறைந்தாலும், அவரது சிந்தனைகள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றாா் நம்மாழ்வாா் மக்கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் சி. மகேந்திரன். நம்மாழ்வாா் பிறந்த நாளையொட்டி,... மேலும் பார்க்க