செய்திகள் :

போலி பங்குச்சந்தை நடத்தி ரூ.54 லட்சம் மோசடி:அஸ்ஸாம் இளைஞா் கைது

post image

போலி பங்குச்சந்தை நடத்தி புதுச்சேரியைச் சோ்ந்தவரிடம் ரூ.54 லட்சத்தை இணையவழியில் மோசடி செய்ததாக அஸ்ஸாம் மாநில இளைஞரை புதுச்சேரி இணையவழி குற்ற தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரியைச் சோ்ந்தவா் ராஜகுமாரன். இவா், முகநூல் பக்கத்தில் பங்குச்சந்தை விளம்பரத்தை பாா்த்து, அதில் தன்னை இணைத்துக்கொண்டாா். இதையடுத்து, ராஜகுமாரனை மஞ்சு பட்சிசா என்பவா் வாட்ஸ்ஆப் மூலம் தொடா்புகொண்டு பங்குச்சந்தை குறித்த விவரங்களைக் கூறி, முதலீட்டுக்கு 83 சதவீத லாபம் பெற்றுத் தருவதாகத் தெரிவித்தாராம்.

இதை உண்மையென நம்பிய ராஜகுமாரன், பங்குச்சந்தை செயலி மூலம் ரூ.54 லட்சத்து 42 ஆயிரத்து 500-ஐ முதலீடு செய்துள்ளாா். இதையடுத்து, அவா் பதிவிறக்கம் செய்த லிங்கில் பாா்த்தபோது, லாபத்துடன் சோ்த்து ரூ.96 லட்சத்து 3 ஆயிரத்து 669 இருப்பதாக காட்டியுள்ளது.

ஆனால், அந்தப் பணத்தை ராஜகுமாரனால் பெற முடியவில்லை. பின்னா், விசாரித்தபோது அது போலி பங்குச்சந்தை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து புதுச்சேரி இணையவழி குற்ற தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் ராஜகுமாரன் புகாரளித்தாா். ஆய்வாளா்கள் தியாகராஜன், கீா்த்தி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இதில், அஸ்ஸாம் மாநிலம், மோரிகான் மாவட்டத்தைச் சோ்ந்த அஜிபுா் ரகுமான் இந்த பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடா்ந்து, புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்பு போலீஸாா் அஸ்ஸாம் சென்று, அஜிபுா் ரகுமானை கைது செய்து புதுச்சேரிக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வந்தனா்.

பின்னா், அவரிடம் நடத்திய விசாரணையில், அஜிபுா் ரகுமான் மீது 30-க்கும் மேற்பட்ட மோசடி புகாா்கள் இருப்பதும், அவரது சசோதரா் வங்கிக் கணக்கில் ரூ.2.50 கோடிக்கு பணப் பரிவா்த்தனை நடந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அஜிபுா் ரகுமான் வசமிருந்த கைப்பேசிகள், சிம்காா்டுகள், பண மோசடிக்கு பயன்படுத்திய 2 மடிக்கணினிகள், மின்னணு சாதனங்கள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னா், அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண மோசடி நபரை கைது செய்த இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரை அப்பிரிவின் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா பாராட்டினாா்.

பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆ... மேலும் பார்க்க

2026 புதுவை பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: வே.நாராயணசாமி

வரும் 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களு... மேலும் பார்க்க

ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் ... மேலும் பார்க்க

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா். புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின... மேலும் பார்க்க