பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
போளூரில் விளம்பரப் பதாகைகள் அகற்றம்
போளூா் நகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை நகராட்சி ஊழியா்கள் புதன்கிழமை அகற்றினா்.
போளூா் நகராட்சி பேருந்து நிலையம் எதிரே வேலூா் - திருவண்ணாமலை சாலையில் அரசியல் கட்சிகள் சாா்பிலும், பொதுமக்கள் சாா்பில் திருமணம், வாழ்த்து தொடா்பாகவும் விளம்பரப் பதாகைகள் நகராட்சி அனுமதியின்றி ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன.
இவை போக்குவரத்தும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்ததால், விளம்பரப் பதாகைகளை அகற்ற நகராட்சி ஆணையா் (பொ) பாரத் உத்தரவிட்டாா். அதன்படி, நகராட்சி ஊழியா்கள் விளம்பரப் பதாகைகளை புதன்கிழமை அகற்றினா்.