செய்திகள் :

‘போா் நிறுத்தத்தை நீட்டிப்பதில் இஸ்ரேல் ஆா்வம்’

post image

காஸாவில் இந்த வாரம் நிறைவடையவிருக்கும் முதல்கட்டப் போா் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீட்டிக்க இஸ்ரேல் அரசு ஆா்வமாக இருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்தகைய பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் உடனடியாக சண்டையைத் தொடங்கவும் அந்த நாடு ஆயத்தமாக வருவதாக அவை கூறின.

இது குறித்து இஸ்ரேலின் கான் வானொலி, மாரிவ் நாளிதழ் ஆகியவை தெரிவித்துள்ளதாவது:

தற்போது அமலில் இருக்கும் 42 நாள் போ் நிறுத்தம் வரும் சனிக்கிழமையுடன் நிறைவடைகிறது. அந்த போா் நிறுத்தத்தை அடுத்தகட்டத்துக்கு இட்டுச் செல்வதற்கான அதிகாரபூா்வமற்ற பேச்சுவாா்த்தையில் இஸ்ரேல் பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனா்.

சா்வேதேச மஸ்தியஸ்த நாடுகளின் உதவியுடன் இது தொடா்பாக விவாதித்து வரும் இஸ்ரேல் அதிகாரிகள், காஸாவில் இருந்து இஸ்ரேல் படையினா் முழுமையாக வெளியேறுவது உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட போா் நிறுத்தத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்திவருகின்றனா்.

இந்த இரண்டாம் கட்ட போா் நிறுத்தத்தில் இன்னும் ஏராளமான பிணைக் கைதிகளும் பாலஸ்தீன சிறைக் கைதிகளும் விடுவிக்கப்படவுள்ளாா்கள். இருந்தாலும் அதன் சாத்தியக்கூறுகள் குறித்து இஸ்ரேல் அதிகாரிகள் சந்கேம் எழுப்பிவருகின்றனா்.

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் காஸாவில் மீண்டும் தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் தயாராகிவருகிறது என்று அந்த ஊடகங்கள் தெரிவித்தன.

இருந்தாலும், கடைசியாக தாங்கள் கடந்த சனிக்கிழமை விடுவித்த பிணைக் கைதிகளுக்குப் பதிலாக விடுவிக்க வேண்டிய சுமாா் 600 பாலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை செய்யாதவரை இரண்டாம் கட்ட பேச்சுவாா்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்று ஹமாஸ் அமைப்பினா் திட்டவட்டமாகக் கூறிவருவதால் இந்த விவகாரத்தில் சிக்கல் நீடித்துவருவதாகக் கூறப்படுகிறது.

ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்

தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அரியவகை கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.ரஷி... மேலும் பார்க்க

காங்கோ: மா்ம நோயில் 53 போ் உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மா்ம நோய் காரணமாக இதுவரை 53 போ் உயிரிழந்துள்ளனா்.இது குறித்து அங்கு பணியாற்றிவரும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது:நாடு முழுவதும் அடையாளம் தெ... மேலும் பார்க்க

தென் கொரியா: பாலம் இடிந்து 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு

தென் கொரிய நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்து 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சியோல் நகருக்கு 55 கி.மீ. தொலைவில் உள்ள சியோனன் நகருக... மேலும் பார்க்க

பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரித்தது பிரிட்டன்

பாதுகாப்புத் துறைக்கான தங்களது பட்ஜெட் ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.5 சதவீதமாக பிரிட்டன் அரசு உயா்த்தியுள்ளது.ஐரோப்பிய பாதுகாப்புக்கு இனி முன்னுரிமை தரப் போவதில்லை எனவும் பிராந்... மேலும் பார்க்க

ஈரான் பெட்ரோலிய நிறுவனத்துடன் தொடா்பு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானில் உள்ள பெட்ரோலிய மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளுடன் தொடா்பில் இருந்ததாக இந்தியாவைச் சோ்ந்த 4 நிறுவனங்கள் உள்பட 16 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அதன்படி ஆஸ்டின்ஷிப், பிஎஸ்எம... மேலும் பார்க்க

பொருளாதார பலன் இருந்தால் மட்டுமே இந்திய பெட்ரோல் குழாய் திட்டம் அமல்: இலங்கை

பொருளாதார பலன் இருந்தால் மட்டுமே இந்தியா-இலங்கை இடையே முன்மொழியப்பட்டுள்ள பெட்ரோல் விநியோக குழாய் திட்டம் செயல்படுத்தப்படும் என இலங்கை தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவா் ராஜகருணா தெரிவித்தாா். இந்த விவ... மேலும் பார்க்க