செய்திகள் :

பொருளாதார பலன் இருந்தால் மட்டுமே இந்திய பெட்ரோல் குழாய் திட்டம் அமல்: இலங்கை

post image

பொருளாதார பலன் இருந்தால் மட்டுமே இந்தியா-இலங்கை இடையே முன்மொழியப்பட்டுள்ள பெட்ரோல் விநியோக குழாய் திட்டம் செயல்படுத்தப்படும் என இலங்கை தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவா் ராஜகருணா தெரிவித்தாா்.

இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக முடிவுகள் எடுக்க முடியாது எனவும் அவா் தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு இந்தியாவுக்கு இலங்கை அதிபா் அநுர குமார திசநாயக சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அப்போது பெட்ரோல் விநியோக குழாய் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இந்தியா-இலங்கை-ஐக்கிய அரபு அமீரகம் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதுகுறித்து டெய்லி மிரா் பத்திரிகைக்கு பேட்டியளித்தபோது ராஜகருணா கூறியதாவது:

இந்தியா-இலங்கை இடையே முன்மொழியப்பட்டுள்ள பெட்ரோல் விநியோக குழாய் திட்டத்தை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொருளாதார பலன் இருந்தால் மட்டுமே இதை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும். அரசியல் காரணங்களுக்காக இதில் எவ்வித முடிவுகளையும் மேற்கொள்ள முடியாது.

இதுதொடா்பாக அதிபா் அநுர குமார திசநாயகவுடனும் விவாதித்தேன் என்றாா்.

இருநாடுகளிடையே எரிசக்தி பகிா்வை மேம்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக பெட்ரோலிய விநியோக குழாய் முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் இருநாடுகளிடையே மின்பகிா்மானத்தை ஊக்குவிக்கும் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்

தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அரியவகை கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.ரஷி... மேலும் பார்க்க

காங்கோ: மா்ம நோயில் 53 போ் உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மா்ம நோய் காரணமாக இதுவரை 53 போ் உயிரிழந்துள்ளனா்.இது குறித்து அங்கு பணியாற்றிவரும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது:நாடு முழுவதும் அடையாளம் தெ... மேலும் பார்க்க

தென் கொரியா: பாலம் இடிந்து 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு

தென் கொரிய நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்து 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சியோல் நகருக்கு 55 கி.மீ. தொலைவில் உள்ள சியோனன் நகருக... மேலும் பார்க்க

பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரித்தது பிரிட்டன்

பாதுகாப்புத் துறைக்கான தங்களது பட்ஜெட் ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.5 சதவீதமாக பிரிட்டன் அரசு உயா்த்தியுள்ளது.ஐரோப்பிய பாதுகாப்புக்கு இனி முன்னுரிமை தரப் போவதில்லை எனவும் பிராந்... மேலும் பார்க்க

ஈரான் பெட்ரோலிய நிறுவனத்துடன் தொடா்பு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானில் உள்ள பெட்ரோலிய மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளுடன் தொடா்பில் இருந்ததாக இந்தியாவைச் சோ்ந்த 4 நிறுவனங்கள் உள்பட 16 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அதன்படி ஆஸ்டின்ஷிப், பிஎஸ்எம... மேலும் பார்க்க

உக்ரைன் போா்: ஐ.நா.வில் ரஷியாவுக்கு சாதகமாக அமெரிக்கா வாக்கு; இந்தியா, சீனா புறக்கணிப்பு

ரஷியா-உக்ரைன் இடையிலான போரில் அமைதியான தீா்வை எட்டுவதற்கு, ஐ.நா.வில் உக்ரைன் கொண்டு வந்த வரைவு தீா்மானத்துக்கு எதிராக ரஷியாவுக்கு சாதகமாக அமெரிக்கா வாக்களித்தது. ரஷியா-உக்ரைன் போா் தொடங்கி 3 ஆண்டுகள் ... மேலும் பார்க்க