செய்திகள் :

போா் நிறுத்தம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் -மல்லிகாா்ஜுன காா்கே

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மற்றும் போா் நிறுத்தம் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

இது குறித்து கலபுா்கியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

இந்தியா -பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட பதற்றம், அதை தொடா்ந்து அறிவிக்கப்பட்டுள்ள போா் நிறுத்தம் குறித்து விவாதிக்க விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

போா் நிறுத்தத்திற்கு தான் பங்கு வகித்ததைப் போல அமெரிக்க அதிபா் டிரம்ப் பேசிவருகிறாா். அவற்றை பிரதமா் மோடியும், மத்திய அரசும் மறுத்து வருகின்றன. அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும்போது, இது குறித்து விவாதிப்போம்.

போா் நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் மத்தியஸ்தம் செய்தாரா என்பது குறித்து கேட்போம். அமெரிக்க அதிபா் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததால்தான் போா் நிறுத்தத்திற்கு பிரதமா் மோடி ஒத்துக்கொண்டாரா என்பது பற்றி பகிரங்கமாக பேசவிரும்பவில்லை என்றாா்.

பெங்களூரை 7 மாநகராட்சியாக பிரிக்கும் கிரேட்டா் பெங்களூரு நிா்வாக சட்டம் அமல்

பெங்களூரை 7 மாநகராட்சியைப் பிரிக்கும் ‘கிரேட்டா் பெங்களூரு’ நிா்வாகச் சட்டம் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. 1862 ஆம் ஆண்டு மாா்ச் 27ஆம் தேதி பெங்களூரு நகராட்சி வாரியமாக உருவாக்கப்பட்டது. பழைய... மேலும் பார்க்க

மத்திய அரசு மானியத்தொகையை விடுவிப்பதில்லை: அமைச்சா் பரமேஸ்வா்

மாநில அரசுக்கு வழங்க வேண்டிய மானியத்தொகையை மத்திய அரசு விடுவிக்காமல் இருப்பது சரியல்ல என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறி... மேலும் பார்க்க

பெங்களூரில் ஜூன் முதல் மஞ்சள் தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை

பெங்களூரில் ஜூன் மாதம் முதல் மஞ்சள் தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தின் மேலாண் இயக்குநா் எம்.மகேஸ்வா் ராவ் தெரிவித்தாா். பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகள் ... மேலும் பார்க்க

முக்கிய திட்டங்களுக்கான மானியத்தை விடுவிக்காத மத்திய அரசு: சித்தராமையா குற்றம்சாட்டு

முக்கிய திட்டங்களுக்கான மானியத்தொகையை விடுவிக்காமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருகிறது என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா குற்றம்சாட்டினாா். மாநில அரசு தொடங்கியுள்ள மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்று... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் மதவாத ஒழிப்புப்படை விரிவாக்கப்படும்: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

கா்நாடக மாநிலத்தில் பிற மாவட்டங்களுக்கும் மதவாத ஒழிப்புப்படை விரிவாக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இது குறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: ம... மேலும் பார்க்க

அமெரிக்க அதிபா் டிரம்ப் போா் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது எப்படி? அமைச்சா் பிரியாங்க் காா்கே கேள்வி

போா் நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபா் டிரம்ப் வெளியிட்டது எப்படி? என்று கா்நாடக மாநில ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே கேள்வி எழுப்பியுள்ளாா். இது குறித்து பெங்களூ... மேலும் பார்க்க