செய்திகள் :

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூருவுக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி!

post image

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேபிடல்ஸ் முதலில் பேட் செய்தது.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகும் ஆப்கனுக்காக விளையாட விரும்பும் முகமது நபி!

தில்லி கேபிடல்ஸ் - 141/10

முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி 19.3 ஓவர்களின் முடிவில் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிகபட்சமாக 22 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். சாரா பிரைஸ் 23 ரன்களும், அன்னாபெல் சதர்லேண்ட் 19 ரன்களும் எடுத்தனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தரப்பில் ரேணுகா சிங் மற்றும் ஜியார்ஜியா வேர்ஹம் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கிம் கார்த் மற்றும் எக்டா பிஸ்ட் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: பும்ரா இல்லாதது வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு: முன்னாள் வீரர்

142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி களமிறங்குகிறது.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேசம் பேட்டிங்!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் வியாழக்கிழமை (பிப். 20) துபையில் சந்திக்க... மேலும் பார்க்க

தோல்விக்கு காரணம் என்ன? பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் பதில்!

முதல் போட்டியில் தோல்வியுற்றது குறித்து பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டியளித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் நேற்று (பிப்.19) மோதின. இந்தப் ப... மேலும் பார்க்க

சொந்த அணியை நம்பாத வருண் சக்கரவர்த்தி..! மனம் திறந்த ரோஹித் சர்மா!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தியைப் பாராட்டி பேசியுள்ளார். அவரது பந்துவீச்சு நுணுக்கங்களை சொந்த அணியிடம்கூட காண்பிப்பதில்லை எனக் கூறியுள்ளார். சாம்பியன்ஸ் டி... மேலும் பார்க்க

ஒரு நாளைக்கு 800 புஷ்-அப்ஸ் எடுக்கும் க்ளென் பிலிப்ஸ்..! வைரலாகும் கேட்ச் விடியோ!

நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப்ஸ் ஒரு நாளைக்கு 800 புஷ்-அப்ஸ் எடுப்பாரென வர்ணனையாளர் சைமன் டவுல் கூறியுள்ளார்.சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இந்... மேலும் பார்க்க

இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் வியாழக்கிழமை (பிப். 20) துபையில் சந்திக்கின்றன.இந்திய அணியை பொருத்தவரை, அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெ... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: வெற்றியுடன் தொடங்கியது நியூசிலாந்து!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. மேலும் பார்க்க