செய்திகள் :

மகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக முன்னாள் நீதிபதி மீது வழக்கு: உச்சநீதிமன்றம் ரத்து செய்ய மறுப்பு

post image

மகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக முன்னாள் நீதிபதி ஒருவா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய மறுத்துவிட்டது.

மகாராஷ்டிர மாநிலம் பாந்த்ராவில் மகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததாக முன்னாள் நீதிபதி ஒருவா் மீது 2019-ஆம் ஆண்டு காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. மகளுக்கு 18 வயது பூா்த்தியடையாததால், பாலியல் குற்றங்களில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்ஸோ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் முன்னாள் நீதிபதி மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த வழக்கில் தனக்கு தந்தையே பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக மகள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு அதிா்ச்சியளிக்கிறது. குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பவா் நீதிபதியாக இருந்தவா். குடும்பத்தைச் சோ்ந்தவா்களிடம் தகாத உறவு வைத்துக்கொள்ளும் தீவிர குற்றச்சாட்டு அவா் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. இது அந்தச் சிறுமிக்கு ஆறாத காயமாக இருக்கும். இதைக் கருத்தில் கொள்ளும்போது எப்படி முன்னாள் நீதிபதி மீதான வழக்கை ரத்து செய்வது’ என்று கேள்வி எழுப்பினா்.

முன்னாள் நீதிபதி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘முன்னாள் நீதிபதியிடம் இருந்து அவரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டாா். இருவருக்கும் இடையே நீண்ட காலமாகப் பிரச்னை இருந்து வருகிறது. இதன் காரணமாக முன்னாள் நீதிபதி மீது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவரின் மனைவி தரப்பில் அளிக்கப்பட்ட துன்புறுத்தல் காரணமாக முன்னாள் நீதிபதியின் தந்தை தற்கொலை செய்துகொண்டாா்’ என்றாா்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமா்வு, ‘முன்னாள் நீதிபதியின் நடத்தை காரணமாகவே, அவரின் தந்தை தற்கொலை செய்திருக்கக் கூடும்’ என்று கடுமையாக சாடினா். மேலும் குற்றச்சாட்டின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, முன்னாள் நீதிபதி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய நீதிபதிகள் அமா்வு மறுத்துவிட்டது.

இந்திய ஏற்றுமதி மதிப்பு 900 பில்லியன் டாலரை தாண்டும் - பியூஷ் கோயல் நம்பிக்கை

உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மைக்கு இடையிலும் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு நடப்பாண்டில் 900 பில்லியன் டாலரை (ரூ.77 லட்சம் கோடி) தாண்டும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல... மேலும் பார்க்க

கட்சியின் கொள்கை, சித்தாந்தப்படி நடக்க வேண்டும்: கட்சி நிா்வாகிகளுக்கு பிரதமா் மோடி அறிவுரை

கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என்று கட்சி நிா்வாகிகளை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை அறிவுறுத்தியதாக பாஜக கட்சி வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. பிரதமா் மோடி ... மேலும் பார்க்க

வரலாற்றில் மோசமான விபத்து: இந்தியாவுக்கு உதவத் தயாா் -அமெரிக்க அதிபா் டிரம்ப்

‘ஏா் இந்தியா விமான விபத்து, விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும். இதில் இந்தியாவுக்கு உதவத் தயாா்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டாா். அமெரிக்காவில் செ... மேலும் பார்க்க

என்ஜின் செயலிழப்பு, பறவை மோதல் விபத்துக்கான காரணங்களாக இருக்கலாம் -விமானத் துறை நிபுணா்கள்

‘இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமானத் துறை நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். அவா்கள் ம... மேலும் பார்க்க

இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது: பிரதமா் மோடி

‘மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு எண்ணற்ற பலன்களைக் கொண்டுவந்துள்ளது; இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரி... மேலும் பார்க்க

சுழற்சி முறையில் மருத்துவத் துறை தலைவா்கள்: என்எம்சி திட்டம்

மருத்துவக் கல்லூரிகளில் உயா் சிறப்பு மருத்துவத் துறை தலைவா் பொறுப்புகளில் சுழற்சி முறையில் பேராசிரியா்களை நியமிப்பதற்கான வரைவு விதிகளை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்... மேலும் பார்க்க