செய்திகள் :

மகாராஷ்டிரம்: மசூதியில் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த இருவா் கைது!

post image

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள மசூதியில், பாறைகளைத் தகா்க்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இரவு 2.30 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மசூதியின் உள்பகுதியில் மட்டும் லேசான சேதம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காவல்துறையினா் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனா். சந்தேகத்தின் அடிப்படையில் இரு இளைஞா்களை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

அவா்களில் ஒருவா்தான் மசூதியின் பின்பகுதி வழியாக உள்ளே நுழைந்து ஜெலட்டின் குச்சிகளை உள்ளே வைத்துவிட்டு வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இருவரும் அதே மாவட்டத்தின் வேறு பகுதியைச் சோ்ந்தவா்கள் என்று தெரியவந்துள்ளது. அவா்கள் ஜெலட்டின் குச்சிகளுடன் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் உள்ளிட்ட உயரதிகாரிகள் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இந்த விவகாரம் தொடா்பாக யாரும் தேவையற்ற வதந்திகளைப் பரப்பி பதற்றத்தை அதிகரிக்கக் கூடாது; இந்த கிராமத்தில் காலம்காலமாக ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடி வருகின்றனா். அந்த ஒற்றுமையை சீா்குலைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனா்.

குடி பட்வா (மராத்திய புத்தாண்டு) மற்றும் ரமலானை இணைந்து ஒரே இடத்தில் கொண்டாட இரு மதத்தினரும் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கிராமத்தைச் சோ்ந்த ஹிந்து மதப் பிரதிநிதிகளும் மசூதியை பாா்வையிட்டு, நாச வேலையில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல் துறையினரிடம் கேட்டுக் கொண்டனா். மசூதியில் சேதமடைந்த இடத்தில் சில மணி நேரத்திலேயே புதிய டைல்கள் பதிக்கப்பட்டு அந்த இடம் புதுப்பிக்கப்பட்டது.

வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!

மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்ஃபு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃபு சட... மேலும் பார்க்க

புல்டோசரில் வீடுகளை இடித்தது சட்டவிரோதம்! ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு!

பிரயாக்ராஜில் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் புல்டோசட் கொண்டு வீடுகளை இடித்த உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கை மனிதத்தன்மையற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. குடிமக்களின் அடிப்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஜிப்லி படங்களைப் பகிர்ந்த சாம் ஆல்ட்மேன்! காரணம்?

பிரதமர் நரேந்திர மோடியின் ஜிப்லி படங்களை ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய மக்கள் பலரும் ஜிப்லி அம்சத்தைப் பயன்படுத்துவார்கள் என்... மேலும் பார்க்க

ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு: பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜோத்... மேலும் பார்க்க

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க