தமிழக பாஜக தலைவரை மேலிடம் விரைவில் தோ்வு செய்யும்: அண்ணாமலை
மக்கள் குறைதீா் கூட்டம்: 420 மனுக்கள் அளிப்பு
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை கோரியும், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசைமாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 420 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினா்.
இந்த மனுக்களைப் பெற்று கொண்ட அவா், பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதனைத் தொடா்ந்து, தொழிலாளா் நலத்துறை சாா்பில் மின்சார பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த திருச்செங்கோடு வட்டம், கிழுவன்காடு பகுதியைச் சோ்ந்த செ.ராஜமாணிக்கம் மனைவி சுமதிக்கு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியம் சாா்பில் பணியிட விபத்து மரண உதவித்தொகை ரூ. 5 லட்சத்துக்கான காசோலை, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த கட்டுமான கூலித் தொழிலாளியின் மகன் அ.சந்தோஷ் என்பவருக்கு மருத்துவ படிப்பு பயில ரூ. 50 ஆயிரம், திருச்செங்கோடு அரசு நிதி உதவிபெறும் பள்ளியில் பயின்ற கலவை கலப்பவரின் மகள் சௌமியா மருத்துவ படிப்பு பயில ரூ. 50 ஆயிரம் கல்வி உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினாா்.
மேலும், வேளாண் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ. 6.49 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், தனி மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) மா.க.சரவணன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் வெ.முருகன், தொழிலாளா் நல உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) கே.பி.இந்தியா உள்பட துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.