நமக்குள்ளே... 30, 40, 50 வயதுகளில் வீட்டுக்குள் காதல்... இருக்கா, இல்லையா?
மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி வலியுறுத்தல்
மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவில் முடிக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அரசிடம் திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேர உரையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனாளிகள் சமீபத்திய மக்கள்தொகை எண்ணிக்கையின்படி அல்ல, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அடையாளம் காணப்படுகிறார்கள்.
கடந்த 2013 செப்டம்பரில் யுபிஏ அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட என்எப்எஸ்ஏ, நாட்டின் 140 கோடி மக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சி என்று அவர் கூறினார்.
குறிப்பாக கரோனா நெருக்கடியின்போது லட்சக்கணக்கான பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைப் பட்டினியிலிருந்து பாதுகாப்பதில் இந்த சட்டம் முக்கிய பங்கு வகித்ததாக அவர் தெரிவித்தார்.