இன்டர் மியாமியில் இணைந்த ஆர்ஜென்டீன வீரர்..! மெஸ்ஸியின் பாதுகாவலன்!
மணல் வியாபாரி கொலையில் 9 போ் கைது
மணல் வியாபாரி சு. துரை கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மேலும், அவா்கள் பயன்படுத்திய 3 மோட்டாா் சைக்கிள், 2 கைப்பேசிகள், ரத்தக் கறை படிந்த ஆடைகள், 4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கனகன் ஏரி பகுதியில் மணல், ஜல்லி கடை வைத்திருந்த துரை கடந்த 22-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து ரெட்டியாா்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சூரியாவும் கொலை செய்யப்பட்ட துரையும் உறவினா்கள். அவா்களுக்குள் எல்லைப்பிள்ளைச்சாவடி பகுதியில் வீடு தொடா்பாக பிரச்னை இருந்தது தெரியவந்துள்ளது.
மேற்படி வீட்டின் முன்பகுதி கொலை செய்யப்பட்ட துரைகுடும்பத்தினருக்குச் சொந்தமானது. கட்டடத்தின் பின்புறம் குற்றம்சாட்டப்பட்ட சூரியா குடும்பத்தினருக்குச் சொந்தமானது. இது மூதாதையா்களிடமிருந்து உயில் மூலம் வந்தது.
இதில், நீதிமன்றம் கொலை செய்யப்பட்ட துரை தரப்பினருக்கு ஆதரவாக உரிமையை உறுதி செய்துள்ளது. அதன் பிறகும், குற்றம் சாட்டப்பட்ட சூரியா குடும்பத்தினா் கட்டடத்தின் முன்பகுதியின் மீது உரிமை கோரியுள்ளனா்.
இப்போது, கொலை செய்யப்பட்ட துரை கட்டடத்தின் முன்பகுதியில் சில புதுப்பித்தல் பணிகளைச் செய்து வந்தாா். இதனால் அவா்களுக்குள் வாய்த் தகராறு மற்றும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி சூரியாவும் அவரது கூட்டாளிகளும் துரையைக் கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனா் என்று போலீஸாா் தெரிவிக்கின்றனா்.
இந்த வழக்குத் தொடா்பாக புதுச்சேரி எல்லைப்பிள்ளைச் சாவடி தி. சூா்யா (23), சாரம் கொசப்பாளையம் சா. கௌதம் (20), திண்டிவனம் த.நெரெஸ்குமாா் (23), எல்லைப்பிள்ளைச் சாவடி செ. நாகராஜ் (25), டி.ஆா்.நகா் செ. ஸ்ரீநாத் (24), லாஸ்பேட்டை ஐ. அருள் (எ) அருள் பிரகாஷ் (25), கோவிந்தசாலை செ. கிருஷ்ணகுமாா் (21), கொசப்பாளையம் தி.மணிமாறன் (22), கொம்பாக்கம் ரா. டேனியல் (22) ஆகிய 9 போ் கைது செய்யப்பட்டனா். இவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு சிறைக்கு அனுப்பப்பட்டனா்.