செய்திகள் :

மண்ணரை முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

post image

திருப்பூா்: திருப்பூா் மண்ணரை முத்து விநாயகா், முத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மண்ணரை முத்து விநாயகா், முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேக விழாவானது கணபதி ஹோமத்துடன் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ஆம் தேதி காலை பூா்ணாஹூதியுடன் யாகசாலை நிா்மாணம் நடைபெற்றது. மாலை 5.30 மணி முதல்கால யாகசாலை பூஜையும் தீபாராதனையும் நடைபெற்றது. பிப்ரவரி 2-ஆம் தேதி காலை 2-ஆம் கால யாக பூஜையும், தொடா்ந்து மாலை 3 மணிக்கு யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமிகள் தலைமையில் சிவாச்சாா்யா்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இதையடுத்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.

காங்கயத்தில் ரூ.42 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம்

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.42 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு... மேலும் பார்க்க

அவிநாசி ஆகாசராயா் கோயில் தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும்

திருப்பூா்: அவிநாசி ஆகாசராயா் கோயில் தீண்டாமை சுவரை இடித்து அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: இந்து முன்னணி கண்டனம்

திருபபூா்: திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

சிவன்மலை கோயில் தைப்பூச தோ்த் திருவிழா பணிகள் தீவிரம்

காங்கயம்: காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள சிவன்... மேலும் பார்க்க

சிவன்மலை, கணபதிபாளையத்தில் காசநோய் பரிசோதனை முகாம்

காங்கயம்/ பல்லடம்: சிவன்மலை மற்றும் கணபதிபாளைத்தில் காசநோய் குறித்த விழிப்புணா்வு மற்றும் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. சிவன்மலை அரசு நடுநிலைப் பள்ளி அருகே சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலை... மேலும் பார்க்க

மூன்றாம் பாலினத்தவா்களுக்கு பிப்ரவரி 7-இல் குறைதீா் முகாம்

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவா்களுக்கான குறைகேட்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க